நடிகர் அதர்வா நடிப்பில் ராஜ்கிரண் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்கும் படம் பட்டத்து அரசன். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சற்குணம். வரும் 25-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் அதர்வா, ராஜ்கிரண் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டு சிங்கம்புலி பேசும்போது, “இந்தப்பட்டத்து அரசன் பெரிய வெற்றியைப் பெற்று எல்லோரையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோகும். இந்தப்படத்தை எல்லோரும் சேர்ந்து பெரும் முயற்சியெடுத்து கொண்டு வந்திருக்கிறோம். அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார். மேலும் லைகா புரொடக்சனில் படம் பிடிக்க வேண்டும் என்றால் தஞ்சாவூரை பின்புலமாக வைத்து கதை எழுதினால் கிடைக்கும்” என்றார். காரணம்? வேறென்ன, “பொன்னியின் செல்வன்” தான்