Tamil Movie Ads News and Videos Portal

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

முன்னோக்கியப் பார்வையோடு உள்ள தத்துவங்கள் அவை சொல்லப்பட்ட காலங்களில் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இதுவே வழிநெடுக உள்ள வரலாறு. ஆர்த்தோ என்ற கலைஞனின் சிந்தனைகளை புறந்தள்ளி ஐரோப்பா அவரை வதை செய்ததை இந்நூல் நாடக வடிவவில் தருகிறது.

நூலின் ஆசிரியர் சாரு நிவேதிதா நாடகத்து மாந்தர்களில் ஒருவராக உள்வந்து இந்த நிகழ்த்துக் கலையில் பங்குபெற்றுள்ளதால் சில விடயங்கள் தெளிவாக புலப்படுகின்றன. வழக்கம் போல் சில சினிமாட்டிக் சட்டையர்கள் தரமாக அமைந்துள்ளது. சினிமா நடிகர்கள் மீது நம் நாடு பெரு மோகம் கொண்டுள்ளதை ஒவ்வாமையோடே பார்க்கிறார் சாரு. காரணம் எந்த ஹீரோவோ?!

நூலின் முன்னுரையை ஜெயமோகன் வழங்கியுள்ளார். நூலை வாசிப்பதற்கு முன்னும் பின்னும் அதை வாசிப்பது நூலை முழுமையாக உள்வாங்க இயலும்.

ஆர்த்தோ எனும் கிளர்ச்சியாளன் இயேசு கையில் வைத்திருந்ததாய் சொல்லும் ஒரு கோல். அதை ஏற்க மறுக்கும் பாதிரிகள். ஆர்த்தோ ஓர் அபாய அரைவேக்காடு என கருதி வதைமுகாம்களில் அவரைப் போட்டு வதைக்கும் காட்சிகள், ஆர்த்தோ உரையாடல், வாக்குமூலம் என நிறைய தத்துவ தரிசனங்கள் கிடைக்கிறது.

பெருங்கலைஞன் அந்த காலத்தில் கவனிக்கப்படுவதில்லை என்ற வரலாற்றுக்குறைகள் இனி குறையும் வாய்ப்புள்ளது. அதற்கான மூலக்காரணிகளை காத்திரமான கலைஞர்களே வழங்கி வருகிறார்கள். சாருவின் எழுத்து தேடல் எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கும். இந்த நூலும் அப்படித்தான்

இதில் நிறைய வசனங்கள் எனக்குப் பிடித்தவை…நூலிருந்து எடுத்து பின்னட்டையில் ஒட்டப்பட்ட வசனம் ஒன்று இப்படி வருகிறது..

“உணவுச்செடிகளை அழித்து விட்டு போதைச் செடிகளை பயிரிட்டீர்கள். எங்களுக்கு வாழ்க்கையே போதை. ஓடுவது போதை, இசை போதை. ஆனால் நீங்களோ போதையை மாத்திரைகளிலும் ஊசிகளிலும் தேடுகிறீர்கள்” ❤️❤️