நாட்டாமை தீர்ப்புக்கு மாற்று தீர்ப்பு உண்டா எனச் சொல்லும் அளவில் சரத்குமார் ஒரு ஸ்ட்ராங்க் பாயிண்டை ஹிட் லிஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்சில் சொன்னார்.
இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ஹிட்லிஸ்ட் படம் மிகப்பிரமாதமாக வந்திருப்பதாக சினிமா உலகில் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்நிலையில் இன்று சென்னை கமலா திரையரங்கில் இப்படத்தின் ஆடியோலாஞ்ச் நடைபெற்றது. விழாவில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் படக்குழு முதல்கொண்டு மிஸ்கின் உள்பட நிறைய திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் சரத்குமாரின் பேச்சு நட்புக்காக என்பதாகவும், நாட்டாமை சொன்னா சொன்னது தான் என்பதாகவும் இருந்தது.
“கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் சார் இருவரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இந்தப்படத்தின் கதை சிறப்பான கதை. கண்டிப்பாக வெற்றியடையும்” என்றவர் மேலும் பல இன்ட்ரஸ்டிங் ஆன விசயங்களையும் சொன்னார். உடற்பயிற்சி ஒவ்வொரு நபரையும் நலத்தோடு வைத்திருக்கும் என்பதையும் பேசி கைத்தட்டல்களைப் பெற்றார். சரத்குமார்
புரியாத புதிர் என்ற படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் போது தனக்கு நல்ல கேரக்டர் தந்ததாகவும், தனக்கு அந்த நேரத்தில் பெரும் விபத்து நடந்ததாகவும், பலரும் தன்னை மாற்றும் படி சொன்னதாகவும், ஆனாலும் கே.எஸ்.ரவிக்குமார் நான் தான் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்” என்றும் சரத்குமார் பேசப்பேச பல எமோஷ்னல் மொமெண்ட்ஸ் கிடைத்தது
ஆக நல்ல பாசிட்டிவ் வைப்-ல் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது .படமும் அப்படியே அமையட்டும் என வாழ்த்துவோம்