Tamil Movie Ads News and Videos Portal

கொக்கோகம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

“கூடிய மகளிர் தம்மைக்
குணம் கொண்டு கலவியாடி
நீடுறத் தனது போகம்
நிறுத்தி அங்கவர் போகத்தை
ஊடுற முன்னே யாக
ஒத்ததாப் போக்கு வானேல்
ஆடவர் திலகன் என்ன
அறைந்திடும் அவனை ஞாலம்”

இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களில் ஒன்று 👆👆

“விருப்பறிந்து வினையாற்று- உனை
குறித்து வைத்து கொண்டாடும் காலம்” என்கிறார் அதிவீரராம பாண்டின். “மேட்டர் பண்றதை சொல்றதுக்கெல்லாம் புக்கா?” என்றால் அது அதி அவசியம் என்பதை ஆதி காலம் தொட்டே உணர்த்தி வருகின்றனர் சான்றோர்கள். காமம் சார்ந்த பாடங்களை எடுத்த புத்தகங்களில் காமசாஸ்திரம் முக்கியமான நூல்..இன்றைய நடைமுறை வாழ்விற்கு ஒத்து வராத பல கருத்துக்கள் அதில் இருந்தாலும், காமத்தை அணுகும் ஆற்றலை 60% அந்த நூல் மூலம் கற்க முடியும். அதன்பின் “தடியை எடுத்தவன்லாம் தண்டல் காரன்” என்பது போல, “இப்டி செய்யணும், அப்டி செய்யணும்” என்ற நாலு வார்த்தைகளைத் திரும்ப திரும்பச் சொல்றவங்களாம் வாத்ஸ்யனார் ஆகிட்டாங்க. அதனால நூல்கள் குவிஞ்சிடிச்சு. அப்படி குவிந்த நூல்களில் “தந்திரா வழியில் தாம்பத்யம்” என்ற நூல் நல்ல நூல். அதன்பின் இந்த கொக்கோகம்

வடமொழியில் கொக்கோக முனிவரால் எழுதப்பட்டு, பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் மொழிபெயர்த்த இந்த நூலுக்கு கவிஞர் பத்மதேவன் விளக்கவுரை எழுதியுள்ளார். பத்மதேவன் அடிப்படையில் கவிஞர் என்பதால் சில விசயங்களை ரொம்ப நேக்காக சொல்லியிருக்கிறார்.

“பட்டப்பகலில் வெளி மயக்கேச் செய்யும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவா கச்சி ஏகம்பனே” என்று பாடிய பட்டினத்தார் முதல், சம்போகத்தையும் பெண்களையும் வெறுத்தொதுக்கும் சித்தர்கள் வரை அனைவரையும் அதிராமவீரபாண்டியன் போட்டுப்பொளந்துள்ளார். அதற்கான உரையில் கூடுதல் வேகத்தை காட்டியுள்ளார் உரையாசிரியர் பத்மதேவன்

காமம் தாண்டாத சன்னியாசி வாழ்வு ஆற்றாமை நிறைந்தது என்பதே இவ்விருவர்களின் கருத்து. பெண்களின் மேலுள்ள பயத்தால் தான் சித்தர்கள் இப்படி புலம்பியுள்ளார்கள் என்பதை நிறுவுகிறார் பாண்டிய மன்னன்

ஞான வழியைக் கண்டடைய வேண்டுமானால் காமம் எனும் குழிக்குள் விழக்கூடாது என்பது சித்தர்கள் வாதம்

ஞானத்தை கண்டடைய, அந்தக் ‘குழி’ தான் வழியாக இருக்கிறது என்கிறார் அதிவீரராம பாண்டியன். வழியில் குழி இருந்தால் விலகலாம். வழியே குழியாக இருந்தால்? இப்படி கிடுக்குப்பிடி போட்டு கேட்கிறார் பத்மதேவன்..

எப்படியோ காமம் தாண்டாமல் ஞானம் தேடுவது, கானல் நீரில் தோணி ஓட்ட நினைப்பது போல

புத்தகத்தில் பெண்களின் வகைகள், புணர்வுகளின் வகைகள்,பெண்/ஆண் உடலுறுப்புகளின் தன்மைகள், தாம்பத்யத்தின் கால அளவுகள், இன்பம் நீட்டிக்க குறிப்பெடுக்க வேண்டிய தரவுகள், ஆண்களுக்கு ‘குறி’ என்பது அது ஒன்றுமட்டுமல்ல என்பதை குறிப்பால் உணர்த்தும் கருத்துக்கள் என அனைத்துமே அட்டகாசம். புத்தகத்திற்குள் வருவதற்கே 50 பக்கங்களைத் தாண்ட வேண்டியதிருக்கிறது. அதுவரைக்கும் பத்மதேவனே பேசுகிறார். ஒரு கட்டத்தில், “சீக்கிரம் மேட்டர்க்கு வாங்க” என்று எண்ண வைத்துவிடுகிறது

“ராமபாணம் கூட குறி தவறும். காமபாணம் தப்பாது” என்று நூலில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல் கூடவே ராமாயணமும் வாசித்து வரும் எனக்கு திக்கென்றிருந்தது. ஆனாலும் அதிலிருக்கும் நிரந்தர நிதர்சனம் புரிந்தது

காமத்தை கொண்டாடி வருபவர்கள் கூட, “போகம்” தொடர்ந்து நடக்க நடக்க ஒரு கட்டத்தில் சலிப்படைந்து மேலோட்ட காமத்திற்கு நகர்ந்து விடுவார்கள். இன்ப விளையாட்டில் சில விசயங்களை மறந்தும் விடுவார்கள். அப்படி நகரக்கூடாது, மறக்கக் கூடாது என்பதை நினைவூட்ட இப்படியான நூல்கள் அவசியமாக இருக்கிறது

காமம் வாழ்க்கைச் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்று. அதில் ஒருவர் மட்டும் நிறைவது நிறைவல்ல.. இருவரும் நிறைந்து தழும்ப வேண்டும்