ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி
காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின்
பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது,
புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லர் ஆகும்.
இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் இந்தத் தொடரை உருவாக்கி வழங்கிய – கதாசிரியர்கள் , படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறினார்கள் “வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி ஐத் தொடர்ந்து எங்களது இரண்டாவது கூட்டு முயற்சியான சுழல் – தி வோர்டெக்ஸ் -முதல் சீசன் க்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அன்பு மற்றும் பாராட்டுக்கள் ஒரு மனதை ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை கொண்ட உள்ளூர் கதைகள் வடிவங்கள், பிராந்தியங்கள் மற்றும் மொழியறிவையும் கடந்து அனைவரையும் சென்றடைய ஸ்ட்ரீமிங் எவ்வாறு வழிவகுத்தமைத்துத் தந்திருக்கிறது என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் உலகை மேலும் விரிவடையச்செய்யும் வகையில் ஒரு கற்பனைக் கிராமத்தின் பூர்வீக குடிகளின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு இருளடைந்த மர்மமான மற்றும் மனதை சில்லிடவைக்கும் ஒரு கிரைம் மற்றும் அஷ்டகாளி திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சிகளுடன் ஆழமாகச் சென்று அதன் இரண்டாவது சீசனை நாங்கள் வடிவமைத்தோம், பிரம்மா மற்றும் சர்ஜுனின் உன்னதமான இயக்கம், கதிர், ஐஸ்வர்யா மற்றும் லால் ஆகியோரின் அற்புதமான திறமை மிக்க நடிப்பாற்றல் ஆகியவற்றுடன் அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய திறமைகளின் மாறுபட்ட கூறுகளின் கலவையான திறமை மிக்க நடிகர்களின் குழுவோடும், இந்தத் தொடர் பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையிலான உள்ளூர் கதைசொல்லலின் பல்துறைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பிரைம் வீடியோவுடன் கூட்டணி அமைத்து இந்த கிளையுரிமையை கட்டியெழுப்புவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் இதன் மூலம் படைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், படைப்பாளிகளுக்கு தங்கள் உருவாக்கங்களை காட்சிப்படுத்த மிகப் பெரிய கேன்வாஸை வழங்குவதோடு அவர்களின் கருத்தாக்கங்களை தங்கள் சேவையின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” .