நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் பேசியதாவது….
இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு என் நன்றி. இப்படத்திற்காக உழைத்திட்ட இயக்குநர், நடிகர்கள்,, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பெப்பின் ஜார்ஜ் மிகத் திறமையானவர். இப்படத்தில் அவரது திறமையை நிரூபித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைத்து ரசிகர்களும் எங்களது இப்படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் ஞானக்கரவேல் பேசியதாவது…
எமகாதகி திரைப்பட இயக்குநர் பெப்பின் ஜார்ஜுக்கு வாழ்த்துக்கள். இந்த மூன்று நாட்களில் இப்படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இத்திரைப்படம், மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் பத்திரிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் தான். உங்களது பாராட்டுக்கள் தான் மக்களிடம் இப்படத்தை எடுத்துச் சென்றுள்ளது. இன்னும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற, நீங்கள் ஆதரவு தர வேண்டும் அனைவருக்கும் நன்றி.
நடிகை ஹரிதா பேசியதாவது…
பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றியும் அன்பும். இப்படம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. இப்பாத்திரத்தை எனக்குத் தந்த பெப்பின் ஜார்ஜுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர், எடிட்டர், சவுண்ட் டிசைன் ஆகிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. 36 மெயின் கேரக்டர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். உடன் நடித்த, ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எங்கள் உழைப்பைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் சுபாஷ் பேசியதாவது….
இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு முழு ஆதரவு தந்த வெங்கட்டுக்கு நன்றி. ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பெப்பின் எனக்கு தந்த இடம் மிகப்பெரிது. அவர் இப்போது வேறோரு படத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எனக்குத் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க்கிற்கு நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. படத்தை எடுத்து, ரிலீஸ் செய்வது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமாக உள்ளது, அதற்கான தீர்வை பெரியவர்கள் முன்னெடுக்க வேண்டும். எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசியதாவது…
எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு. இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார். இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி. சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் நன்றி.
தயாரிப்பாளர் ராகுல் வெங்கட் பேசியதாவது..
எங்கள் படத்தை மிகப்பெரிய படமாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தின் கதையை பெப்பின் சொல்லி 3 வருடம் ஆகிவிட்டது. இப்படம் உருவாக என் அம்மாவும் அப்பாவும் தந்த ஆதரவு மிக முக்கியம். அவர்களுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் எனக்கு ஆதரவு தந்தார்கள். எனக்குப் பணம் முக்கியமில்லை, பணத்துக்காக இப்படத்தைத் தயாரிக்கவில்லை. பெப்பின் இப்படத்தில் 36 ஆர்டிஸ்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படம் குழுவாக எங்களுக்கு முக்கியமான படம். சுஜித், ஸ்ரீஜித் இருவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். எல்லோருமே மிக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். எங்களுக்கு நிறையப் பதட்டம் இருந்தது. ஆனால் இப்படத்தை நீங்கள் பார்த்த பிறகு தான் மிகப்பெரிய நிம்மதி வந்தது. நீங்கள் தந்த பாராட்டில் தான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்துள்ளது. திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் தான் அனைவருக்கும் என் நன்றிகள். கீதா மேடம், ரூபா, நரேந்திர பிரசாத் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தனர். இன்னும் இது போல் நிறைய நல்ல படங்கள் செய்வோம் ஆதரவு தாருங்கள் நன்றி.
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பைச் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
மார்ச் 7 ஆம் தேதி வெளியான “எமகாதகி” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.