Tamil Movie Ads News and Videos Portal

ஆனைவாரியும் பொன்குருசும்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஓரிரு நூல்களிலே ஈரக்குலை வரை ஈர்த்தவர் பஷீர். இதில் ஒரு கதையும் ஒரு உரையும் இருக்கிறது

முதலில் கதை! யானையை திருட முனையும் இரு மனிதர்களின் முயற்சியில் நகைச்சுவையும் இயல்பும் தெறிக்கிறது. ஏசுவை மரச்சிலுவையில் தானே அறைந்தார்கள். அவருக்கு ஏன் தங்கச்சிலுவை? என்று அதை திருடி ஒரு கையறுநிலை மனிதர்க்கு கொடுக்கிறான் தேமா. அது சம்பந்தப்பட்ட விசாரணையில் அவன் சொல்லும் நீதி பைபிளுக்கு பொருந்துமா என்று தெரியாது. ஆனால் மார்க்கங்களைப் பார்த்து அந்த நீதி சிரிக்கிறது. நல்லதொரு கதை இது

அடுத்து உரை!

மரணம் நிரந்தரமானது இயல்பானது என்றாலும் எந்த மனிதரும் அந்த எதார்த்தயியலில் தன்னைப் பொருத்த நினைப்பதில்லை. அப்படி பொருத்தி வாழ்ந்தால் மனிதனின் வேகமும் கண்டுபிடிப்புகளும் இருக்காது என்பதும் நிஜம். அதே சமயம் வாது சூதும் கூட குறையும்.. பஷீர் தனது உரையில் மரணம் எனும் எதார்த்தத்தைத் தான் பேசுகிறார். சற்று புலம்புகிறார் என்றே சொல்ல முடியும்.

இந்த உரையில் பாடல்கள் பற்றியும் அதைப்பாடுபவர்கள் பற்றியும் ஏங்கி ஏங்கிப் பேசுகிறார். 60 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒரு பாடகியின் குரலைக் கேட்டு, “இனிமையான பாடலை நான் கேட்கிறேன். இசைத்தட்டிலிருந்த பெயர் அழிந்து போய்விட்டது. அந்தப்பெண்மணி பாடுகிறாள். தங்கமே நீ எங்கிருக்கிறாய்? முடிவற்ற சூனிய வெளியிலா? எனக்கு லேசான அழுகை வரும் போலிருந்தது” என்று எங்கி அழுதுரைக்கிறார் பஷீர்

இந்த இடத்தில் எனக்கு நமது SPB-யின் நினைவு வந்தது அப்படியே அழுகையும் 😭

வாழ்க்கை என்பது பிரார்த்தனை என்று முடிக்கிறார் பஷீர்

பிரார்த்திப்போம்🙏