நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி, நடிகை அனுஷ்கா ஆகிய மூவரும் வெற்றிக்கூட்டணி என்பதை சினிமாவுலகம் அறியும். அதனால் அருவா படத்தில் அனுஷ்கா இருந்தால் ராசி படி நல்லாருக்குமே என்பது சூர்யா எண்ணம். நல்ல எண்ணம் தானே?! ஆனால் அங்கு தான் அனுஷ்கா செக் வைத்துள்ளார். எக்காரணம் கொண்டும் இனி தமிழ்சினிமாவில் நடிப்பதில்லை என்று அனுஷ்கா முடிவெடுத்துள்ளாராம். நடிகர் சூர்யா கேட்டுக்கொண்ட பிறகும் அனுஷ்கா ஸாரி என்று மறுத்து விட்டதாக தகவல். “ஏன் அனுஷ்காவிற்கு தமிழ்சினிமா மீது இப்படியொரு வருத்தம்?” என்று கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் அவர் ஆரம்பத்திலே யோகா டீச்சர் என்பதால் இனி அவர் தனது பயணத்தை ஆன்மிக பாதையில் துவங்க இருக்கிறார் என்றும் செய்தி வருகின்றன.
அனுஷ்கா நெசமாத்தானா?