அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டிலும் தெரிந்த நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். கேரளத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கேரள முன்னணி நாயகனாக வலம் வந்த தீலீப்பை காதல் திருமணம் செய்து, சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்ட திலீப், நடிகை பாவனாவை காரில் கடத்திய பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதாகி, சிறை சென்றார். தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் திலீப், ‘மஞ்சுவாரியருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு தடையில்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்காமல் இருந்த மஞ்சுவாரியர், தற்போது இதற்கு பதிலளித்துள்ளார். அதில் “இனி திலீப்புடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்” என்று தன் தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளார்