Tamil Movie Ads News and Videos Portal

விஜய் சேதுபதி- ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’தொடர்!

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.
அவர்களுடன் இந்தத் தொடரில் திறமை மிக்க நடிகர்களான ராஷி கண்ணா, கே.கே. மேனன், புவன் அரோரா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவான ‘ஃபார்ஸி’ வலைதளத் தொடர், பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படும். சீதா ஆர். மேனன் மற்றும் சுமன் குமார் ஆகிய இருவரும், ராஜ் & டிகே வுடன் இணைந்து , ‘ஃபார்ஸி’ தொடருக்கான கதையை எழுதியுள்ளனர்.

ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஒரு இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான். அதிகம் அறியப்படாத ஒரு ‘காமன் மேன்’ உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது . இருப்பினும் அவனால் தேசத்துக்கு விளையக்கூடிய ஆபத்துக்களை களைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன், வழக்கத்துக்கு மாறாக செயல்படும் அனல் தெறிக்கும் மிடுக்கான ஒரு அதிரடிப்படை அதிகாரியாக (மக்கள் செல்வன் விஜய் சேதுபதி) வலம் வருகிறார். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே‌ வின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ‘ஃபார்ஸி’ எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகி இருக்கிறது. அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடிக்காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும், ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதைப் பின்னப்பட்டிருக்கிறது .