Tamil Movie Ads News and Videos Portal

அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை-கமல்


எந்தவொரு விசயத்தையும் மாற்றுப்பாதையில் நின்று சிந்திக்கும் வல்லமை கொண்டவர் கமல்ஹாசன் சினிமாவாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அதை மாற்று கோணத்தில் பார்ப்பார். முக்கியமாய் அதில் தொலைநோக்குப் பார்வை இருக்கும். இப்போது கொரோனா வைரஸால் நாடே திக்குமுக்காடி வரும் நேரத்தில் ஆளுக்கொரு இசை ஆல்பத்தைப் போட்டு “கொரோனாவை ஒழிப்போம்” என்று பலர் கதறி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் கமல்ஹாசனும் ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதுகிறார் என்றதும் சற்றே நிமிர்ந்து பார்த்தது தமிழகம். நினைத்தது போலவே அறிவும் அன்பும் என்ற தலைப்பில் ஒரு பாடல் எழுதி இருப்பதோடு இன்றைய இளம் கலைஞர்களோடு இணைந்து பாடியும் இருக்கிறார். “பொதுநலம் என்பது தனி மனிதன் செய்வதே” என்ற வரியில் துவங்கும் பாடல் விஷுவல்ஸ், வரிகள், இசை, குரல்கள் என அனைத்திலும் ஈர்க்கிறது. பாடலில் மிக முக்கியமான வரி ஒன்று வருகிறது. “அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை” என்ற வரி தான் அது. நிச்சயம் நமக்கான ஆறுதலும் தேறுதலும் தான் இப்பாடல். நன்றி ஆண்டவரே!

https://t.co/rBZ3YdT6yn