Tamil Movie Ads News and Videos Portal

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் நூல்கள் என்றாலே கசப்பு மருந்தெனக்கு. திரைக்கதை எழுத்தாளர் தாஸ் சார், “இதை நீங்க படிச்சே ஆகணும்” என ஆர்டர் போட்டார்.

“மிருகத்தின் கரம் மனிதனின் கரமாக சுதந்திரம் பெற்றது உழைப்பின் வழியே தான்” என்ற எங்கெல்ஸின் வரிகள் என்னை யோசிக்க வைத்தது. உழைப்பை கழித்துவிட்டால் உலகமில்லை.

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என இந்நூல் நிச்சயமாக ஒருமுறை வாசித்ததும் நம் மண்டைக்குள் உட்கார்ந்து கொள்ளும் ஈசியான திரவப்பொருள் அல்ல. இது புடம்போடப்பட்ட திடப்பொருள். செறித்துக்கொள்ள காலம் எடுக்கும்

அமெரிக்காவில் மார்கன் செய்த ஆய்வின் அடிப்படையிலும் 1883-ல் மார்க்ஸ் இறந்த பின் அவரின் கருத்தை அடியொற்றியும் இந்நூலை எங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

குடும்ப அமைப்பு உருவாகும் முன் பாலியலில் இருந்த பன்மை நிலையையும், அதன்பின் தோன்றிய ஒருதார மணம் ஆகிவற்றின் பரிணாமத்தையும் அதனால் உருவான குடும்ப அமைப்பு வரலாற்றையும் பேசும் நூல், அரசின் தோற்றத்தைப் பற்றி அழகாக ஒரு விசயம் சொல்கிறது. “அரசு என்ற அமைப்பு சுடர் விடும் மனித பகைமைகளுக்கு நடுவில் நின்று விலக்கு தீர்ப்பதற்காக நிறுவப்பட்டது என்கிறது. மேலும் பலம் உள்ளவர்க்கு நியாயம் செய்ய அரசு அமைப்பு முனைப்பு காட்டும் என்பதையும் வரலாற்று வழி கூறுகிறார் எங்கெல்ஸ்

ஆண்/பெண் என்ற பாலினப்பிரிவில் நடைபெறும் சுதந்திரச் சுரண்டலும் நூலில் காத்திரமாக கூறப்பட்டுள்ளது.

நூலை முழுதும் உள்வாங்கும் காலம் இன்னும் இருக்கிறது. அந்தக் காலத்தை நோக்கிய வாசிப்பு பயணத்தைத் தொடர வேண்டும். ஏன் என்றால் கம்யூனிசம், மார்க்ஸிசம் ஆகியவற்றை சும்மா இட்லி சட்னி என சொல்லி ஒப்பேத்த முடியாது. அது மிகப்பெரிய தத்துவம். வாசிப்போம்