உள்ள இருக்குறதை உள்ளபடியே பேசுவதில் நம்பர் ஒன் நடிகர் சமுத்திரக்கனி. சமீபத்தில் அவரது கடிதங்களைப் படித்த அனைவருக்கும் அது தெரியும். சமுத்திரக்கனி மேடையேறினால் மீடியாவிற்கு content confirmed. நேற்று முடக்கறுத்தான் என்ற பட விழாவிற்கு விழாவிற்கு வந்திருந்தார் சமுத்திரக்கனி. விழாவில் படத்தின் நடிகரும் இயக்குநருமான வீரபாபு உள்பட படக்குழு அனைவரும் இருந்தனர். படத்தைப் பற்றிப் பேச வந்த சமுத்திரக்கனி, “அண்ணன் வீரபாபு மிகவும் நல்ல மனிதர்..அவர் படம் எடுக்கிறார் என்று சுப்பிரமணியசிவா சொன்னதும், ” அவரைப் படம் எடுக்கச் சொல்லாதீங்க” என்றேன். ஏன்னா இன்னைக்கு சின்னப்படங்கள் வெளிவர்றதுக்கு அவ்ளோ சங்கடப்படுது. ஆனால் வீரபாபு படத்தை எடுத்து முடித்துவிட்டதாக சுப்பிரமணியசிவா சொன்னார். படத்தைப் பார்த்தேன். படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்” என்றார். மேலும் சமுத்திரக்கனி சிறப்பாக பேசி முடித்தார். படம் சிறப்பாக உள்ளது என்ற சமுத்திரக்கனியின் பேச்சு படக்குழு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இப்போது முதல் வரியைப் படியுங்கள்