Tamil Movie Ads News and Videos Portal

நான் ஷர்மி வைரம்- ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

நெசமா இதுல ஒரு படத்திற்கான மேட்டர் இருக்கு.. என்ன எல்லாம் “மேட்டர்” ஆகவே இருக்கு.

முன்னால தேவதாசி முறை இருந்த மாதிரி இந்நாள்ல Call boy முறை இருக்குன்றதை ரைட்டர் ஸ்ட்ராங்கா சொல்லிருக்காரு. அப்படி ஒரு உலகம் இருக்குன்றதை ஆனந்த விகடன்ல பேசாத பேச்செல்லாம்னு ஒரு தொடர் எழுதிய பிரியா தம்பியும் மென்சன் பண்ணிருந்தாங்க. அவங்க மென்சன் பண்ணிருந்ததையும் அண்ணன் குறும்புத்தனமா மென்சன் பண்ணிருக்காப்டி.

அப்புறம் call boy னா என்ன?

செக்ஸ் வொர்க்கஸ் தான்!
செழிப்பு நிலையில் இருக்கும் பெண்களில் ஒருசிலர் தங்களின் உடல் தேவைகளை இந்த நூலில் வர்ற ராஜன் கேரக்டர் போன்றவர்களை வச்சி பயன்படுத்துவாங்க..மேலும் அவங்க என்னலாம் படுத்துவாங்க என்பதையும் எதை எதை எப்படிலாம் பயன்படுத்துவாங்க என்பதையும் ரைட்டர் கோடிட்டு சொல்லிருக்கார். இதனால் சமூகத்துக்கு என்ன பய்ன்னா..?? ஒரு புண்ணாக்கும் கிடையாது. இதையும் முன்னுரையில் பூடகமா சொல்லிருக்க ரைட்டரின் நேர்மையை ரசித்தேன்.

” மாற்றுறுப்பின்பம்” சம்பந்தமா அனுபவச்சிவங்க சொல்லி எழுதிருப்பார் போல. அதனாலே இந்த நூல் நிஜமாக வயதுக்கு வந்தவர்கள் தான் வாசிக்கணும்…(எதுக்கு வாசிக்கணும்னு கேட்டா என்கிட்ட பதில் இல்ல மக்கா)

இதுக்குன்னு ஒரு நெட்வொர்க், சில புரோக்கர்ஸ், சரியா ஆர்கனைஸ்ட் பண்ற லேடின்னு பெரிய டீமே இருக்குதாம். அதெல்லாம் நாவல்ல இருக்கு. ஷர்மி இந்தத்தொழிலுக்கு வர்றதுக்கு சதி காரணமாகுது, ராஜன் இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கு வெறி காரணமாகுது,. பிறகு நாவல்ல போறபோக்குல இவங்களுக்குப் பின்னாலயும் கண்ணீர் இருக்கு, கஷ்டம் இருக்கு, ‘Feeling’s இருக்கு, லவ்வு இருக்குன்னு நிறைய சால்சாப்பு ஸ்டோரிகளை ரைட்டர் பின்னி இருந்தாலும், நமக்கு ஞாபகத்துல அதெல்லாம் நிக்கவே மாட்டேங்குது, “என்னடா நீ கிடைக்கவே மாட்டேன்ற. சும்மா நின்னு பேசுவியாமே?” இப்படியான விசயங்கள் தான் மனசுல நிக்குது. அதுதான் இந்நாவலோட சறுக்கலா நான் பார்க்குறது.

ஒரு கதையைச் சொல்லி முடிக்கும் போது அந்தக்கதை தான் மனசுல நிக்கணும். ஆனா இதில் அந்தமாதிரியான காட்சிகள் தான் மனசுல நிக்குது.

சில வருசத்திற்கு முன்னாடி நம்ம ஒரு கவிதை எழுதினோம். அதில் ஒரு ஏரியா இப்படி வரும்,

“யாருமற்ற மலையாடி வாரத்திற்கு அழைத்துச் சென்றவன், நான் சிணுங்க சிணுங்க மார்பில் முத்த மழை பொழிந்தான். பின் நான் கதற கதற அம்மார்புகளை அறுத்தான்” ன்னு.

இதை ஒரு பெரியவர்ட வாசித்துக் காட்டினேன். அப்போ அவர் சொன்னார்,

“இதுல அவா மார்பை அறுக்கான்னு ஒரு கொடுமையைச் சொல்லிருக்க. ஆனா எனக்கு அதைவிட அவன் மார்புல முத்தம் கொடுத்தான்னு சொன்ன பாத்தியா அதான் மனசுல பதியுது” ன்னு சொன்னாரு. நிறையா பேருக்கு முதல்ல அதான் பதியும். அதனால நாம எதைப்பதிவு பண்ணிட்டுப் போறோம்கிறது ரொம்ப முக்கியம்.

(எனக்குலாம் அப்படி பதியாதுன்னு யார்னா சொன்னா நான் நம்ப மாட்டேன்) இந்த நாவலும் அப்படித்தான். முப்பது வயசை கடந்த நமக்கு லேசா நாவலை கடந்து போயிட முடியுது. ஆனா என்னில இருந்து பத்து வைசு கம்மியான ஒருத்தன் என்கிட்ட கேக்குறான்
“Call boy ஆகணும்னா யாரைண்ணா கான்டாக்ட் பண்ணணும்?” ஆத்தீ!!

மத்தபடி வழக்கம் போல் கேபிள் சங்கர் அண்ணனின் ரைட்டிங் அட்டகாசம். முன்னமே சொன்ன மாதிரி ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சினிமா சீக்வென்ஸ் போல அசத்துது. அண்ணன் ஒன்றைத் தொட்டால் தொடர்பவர்..தொடர்ந்து அசத்த வாழ்த்துகள் 🎊