நம்மத் தூக்கிப்பிடிக்கிற மார்க்கத்தில் உள்ள பெருமைகளைப் பேசுறது மாதிரியே சிறுமைகளையும் பேசுறதுக்கு ஒரு துணிச்சல் வேணும்.
சின்மயி கொளுத்திப்போட்டதும் வைரமுத்து பதறினார். இதே மேட்டரை கண்ணதாசனா இருந்தா ஹேப்பியா டீல் பண்ணிருப்பார்..காரணம் சுயவிமர்சனத்தில் அவர் கில்லி. இந்த ஆசிரியரும் சுய எள்ளலை அள்ளித்தெளிச்சிருக்கார். அதை மாதிரி மத்தவங்களையும் விட்டு வைக்கல. சகோதர மார்க்கத்திலும் சமாதானம் உண்டுன்னு சொல்றவரு தான் ஒரு இடத்தில வச்சி செய்றாப்ல..
உயிர்த்தலத்தை முக்கியமான நூல்னு எதன் அடிப்படையில் சொல்ல வேண்டியிருக்குன்னா…பிள்ளைக்குட்டிகளை விட்டுட்டு அதே பிள்ளை குட்டிகளுக்காக எங்கோ ஒரு தேசத்துல போயி குட்டிக்கரணம் அடிச்சி உழைக்கிறவன் வாதையை போறபோக்குல எள்ளலும் துள்ளலுமா பதிவு செய்த அந்தப் பாங்கு இருக்கே…அந்த ஒன்னுக்காகவே இதை வாசிக்கணும்
“எல்லாருக்கும் எல்லா ஊருக்கும் வழி தெரியுது. இதயத்துக்குப் போகத்தான் வழி தெரியல. அதனால் தான் யாரும் ஊர்போய் சேரல” அப்துல் ரகுமான் கவிதை நல்லா எழுதுறாரோ இல்லையோ…இப்படி உண்மையை நல்லா எழுதுவார்…அப்துல் ரகுமான் பத்தி இப்படிச் சொல்லிட்டு ” என்ன அவர் முன்னாடி மைக் இல்லாம இருக்கணும்” என்றும் ஒரு போடு போடுகிறார் ரைட்டர் அய்யா..
அல்லா மயிர்ல இருந்து கொடுப்பான் என்று ஒரு குரல் ஒலித்தால்…தொழுகை என்பதையே செய்யாமல் ஆனால் அல்லா மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருக்கும் “நானா” குரல் வேறு மாதிரியாக ஒலிக்கிறது. குறிப்பாக வாழைப்பழம் கதைக்கு அடுத்து என்னை உலுக்கியெடுத்த கதை நானா பற்றிய கதை தான். நான் நானாவைப் பற்றிய கதையும் அதுவே!
முழுக்க முழுக்க வாதை நிறைந்த கதைகளாகச் சொல்ல முடியும் என்றபோதும் முழுக்க முழுக்க பகடி ரைட்டிங்கால் மிகச்சரியாக கதைகளை இதய ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ஆபிதீன்