வீரன் நிச்சயம் வெல்வான்
இளைஞர்களின் ஆதர்ச நாயகன் எனப்படும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வரும் ஜுன் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் வீரன். இப்படத்தை சினிமாவின் பாரம்பரியமிக்க பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை இயக்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் வீரன் படத்தையும் அதிகப்பொருட்செலவில் தயாரித்துள்ளது. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் ஹீரோ ஹிப்ஹாப் ஆதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் ஹிப்ஹாப் ஆதி பேசும்போது, ” மரகதநாயணம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நான்கு வருடங்களாக செதுக்கி பெர்பெக்டாக உருவாக்கிய கதை இது. இந்தப்படத்திற்குப் பின்னால் அவரது உழைப்பு நிறைய இருக்கிறது. வருங்காலத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்” என்ற ஆதி மேலும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

பிரஸ்மீட் முடிந்து படக்குழுவினர் வெளியில் வந்ததும் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் உமாமகேஷ்வரன் என்ற மாத்யூவிடம் படம் பற்றி கேட்டோம். ஒற்றை வரியில் நச்சென்று ஒரு பதில் சொன்னார்.
“வீரன் நிச்சயம் வெல்வான்”