கதிர், கலையரசன், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் மதயானைக் கூட்டம். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இப்படம் தென் தமிழகப் பகுதிகளில் உள்ள சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை மிகவும் துல்லியமாக அதன் வாழ்வியலோடு பதிவு செய்ததற்காகப் பாராட்டப்பட்டது.

இப்படத்தினை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். “தேரும் போரும்” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். தாய் சரவணனின் நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக் துரை ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சிவகங்கைப் பகுதி மக்களின் வாழ்வியலை அச்சு அசலாகப் பேசும் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது.