நவீனன் பாரதியாரைத் தேடி திருவல்லிக்கேணி செல்கிறார். அங்கு தேரை, சுப்ரமண்ய ஐயர், சுலோ, ஆகியோரிடம் உரையாடுகிறார் . மனிதனை நாய் என்று அழைப்பதை ஏன் வசைமொழியாக கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார். வழக்கம் போல தத்துவக்குறியீட்டுக்களோடு பயணிக்கிறது நாவல். வெறுமை புரையோடிப் போயுள்ள தத்துவங்களாக நிறைய இடங்களில் தெரியும் இந்த நாவலில். வெறுமை மட்டும் தானே உலகில் நிரந்தர பெருமை உடையது!
நகுலனின் எழுத்து கொண்டு கூட்டி பொருள்கொள்ளும் தன்மையுடையது என்பேன். (என்னளவில் மட்டும்)
இந்த நாய்கள் நாவலிலும் அவரது சுசீலாவை ஆங்காங்கே நினைவுப்படுத்துகிறார். நினைவுப்பாதை நாவலில் அதிகமாக இடம்பெற்ற சுசீலா இங்கும் உயிர்பெறுகிறார். நகுலனின் எந்தக் கதையிலும் சுசீலாவை கொண்டுவந்து நிறுத்தி நாவல்களில் கூட ஒரு யுனிவர்ஸ் கனெக்டிங் கொடுத்துள்ளார். நகுலனின் மீதி நாவல்களையும் வாசிக்க வேண்டும். வாசித்தால் NNU (நகுலன் நாவல் உலகம்) அனுபவம் கிட்டும் போல
எழுத்தைப் பற்றி நகுலன் எழுதும் போது, “ஒரு எழுத்து தோற்றுப்போவதில் தான் வெற்றிபெறுகிறது” என்கிறார். நிஜம் தான். திருப்தி அடையாத எழுத்தாளன் தான் புதியவைகளை அள்ளித்தருவான்.
இந்நாவலின் 68-ஆம் பக்கத்தில், “மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாலும் , நாக்கு கிடந்து அடிக்கிறது. உள்ளே ஒரு நாக்கு- வெளிலே ஒன்னு- இது ரண்டுக்கும் நடுவில் மனுஷன் படுறபாடு” என்ற வரிகள் நிறைய யோசிக்க வைத்தது
உள்ளே உள்ள நாக்கின் அசைவில் தான் எவ்வளவு அசைவங்கள்/ அசிங்கங்கள். அதைச் செரிக்காமல் வைத்துக்கொண்டே வெளி நாக்கை வைத்து சிரிக்கும் இந்த வாழ்க்கை தான் எவ்வளவு திரைக்கதை நிறைந்தது. ட்விஸ்ட்கள் வேண்டி நாம் வாழ்வை நடந்தாக வேண்டும்.
“நடப்பதனால் நடை தொடரும்” என்பது நகுலர் வாக்கு!
நாய்கள் நாவல்- ஓர் க்ளாசிக் ரகம்💫👌