Tamil Movie Ads News and Videos Portal

ஜாப் மார்சியா-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

வாழ்வை எழுத்தினூடே எடுத்துக் சொல்வது வேறு. அழைத்துக்கொண்டு காட்டுவது வேறு. அண்ணன் பிரபுதர்மராஜ் நூல் அழைத்துக் கொண்டு காட்டுகிறது. இலக்கியத்தில் இதுவொரு அற்புத வகை

பொண்டாட்டிட்ட எப்டியும் நாலு சாத்து கெடைக்கும்னு தெரிஞ்ச குணா மீன்கடைக்கிப் போய்ட்டு வீட்டுக்கு திரும்ப லேட் பண்ணுதான். காரணம் அவனுக்கு அவன் காதலி மார்சியாவுக்கு கல்யாணங்க சேதி கண்ணுல பிளக்ஸ் ரூவத்துல தெரிது” இந்தக் காட்சி ஆரம்பிக்கும் போதே அண்ணன் எழுத்து கன்னியாகுமரிக்கோ இல்ல நாகர்கோயிலுக்கோ கூட்டிட்டுப் பேருது.

அப்புறம் குணாவுக்கும் மார்சியாவுக்குமான காதலும் சேர்தலும் பிரிதலும்னு குணா ப்ளாஸ்பேக்ல கதை ராக்கெட்டா பறக்கு. “நான் அழகா இருக்கனா” ன்னு ஒரு இடத்துல கேக்கா மார்சியா. குணா சொல்லுதான், “ஒன் தங்கச்ச விட நீத்தாம்ட்டி அழகு” அடுத்து அவா பதில் சொல்லுதா. நமக்கு வெடிச்சிரிப்பு வந்துரும்

எழுத்துக்குள்ள சிரிப்பை புகுத்தி வைக்கது லேசப்பட்ட காரியமில்லை. அதை ஈசியா லெப்ட் ஹேண்ட்-ல ஹேண்டில் பண்றாரு ரைட்டர் பிரபுதர்மராஜ் அண்ணன்

கன்னியாகுமரித் தமிழை இப்படி அச்சு அசலா வாசிச்சதே இல்லை..அட்டகாசம். அண்ணன் கதையில வர்ற கேரக்டர்கள் எல்லாரும் வெகு இயல்பான மனிதர்கள். குறிப்பா அந்தக் குணாப்பயல் இருக்கானே அல்டி ரகம். அட்டக்கத்தி தினேஷ் மாதி லேசா தெரியுற பய சிலநேரம் உடையவும் செய்வான். சக மனுசங்க நம்ம மேல பொழியுற அன்பை லேசா எடுத்துட்டு உதாசீனப்படுத்தக் கூடாதுன்னு ஒரு எடத்துல ஒரு குணா உணர்றான்..அதுக்கு ஆதாரமா ஒரு பிள்ளயோட கதை வருது. 50 இடத்துல சிரிக்க வச்ச இந்த புஸ்தகன், அந்த பொண்ணு வர்ற இடத்துல பொல பொலன்னு அழ வச்சிட்டு.

பிஞ்சிவள பிஞ்ச செருப்பால அடிக்கமாதி சாதி அமைப்புங்க பண்ணுத கோமாளித்தனத்தையும் பொட்டில அடிச்ச மாதிரி கதையோடப் போக்குல சொல்லிருக்கார்.

ஆம்பளைக்குள்ள பத்து பெரியார் புகுந்தாலும், ஒரு பொம்பள ஆம்பளய டாமிநேட் பண்ணுனா பத்து நிமிசத்துல பெரியாரை அடிச்சி விரட்டிட்டு நான் ஆம்பளடின்னு நிப்பான். அவன் தான் ஆம்பளை. பேசுறதை வாழ்க்கையா கொள்ற ஆம்பளைவ இங்க குறைவுன்னு குறிப்பால உணர்த்துற எடம் ஒன்னு இருக்கு கதையில. அசத்தல்”

இந்த வருசம் இதுவரைக்கும் படிச்ச நூலுல அதிகமா சிரிச்சி படிச்ச நூல் இதான். கேரக்டர்ங்க பேசும் வசனங்க சிரிப்பைத் தர்ற மாதிரி..அந்தக் கேரக்டர்கள் நிக்கிற இடங்களும், சந்திக்கிற சூழல்களும், எதிர்வினையாற்றுற ரீ ஆக்‌ஷனும் பெரும் சிரிப்பை வரவெச்சது. தமிழ் சினிமாவில் ஆடியன்ஸை ஈர்க்கிற சுவாரஸ்ய எழுத்தர்கள் கம்மின்னு ஒரு பத்திரிகையாளர் கவலைப்பட்டார். எனக்குத் தெரிஞ்சி பிரபு தர்மராஜ் அண்ணன் சினிமா எழுத்துக்கு கரெக்டான மெட்டிரியல்.