கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நாவல்களில் பெரும் புகழ் பெற்ற நாவல் கருவாச்சி காவியம். அந்நூல் தற்போது மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து வைரமுத்துவின் முகநூல் பதிவு:
“கருவாச்சி காவியம்
மலையாளத்தில்
வெளிவந்துவிட்டது
புகழ்பெற்ற DC BOOKS
நிறுவனம் வெளியிட்டிருக்கிறது
என் செல்ல மொழிபெயர்ப்பாளர்
கே.எஸ்.வெங்கிடாசலம்
மொழிபெயர்த்திருக்கிறார்
அனைத்துலகப்
புத்தகக் காட்சி நிகழ்த்திய
தமிழ்நாடு அரசுக்கு நன்றி
ஒரு நீண்ட பெருமூச்சு
என் நிம்மதியை வெளியிடுகிறது
தகழி சிவசங்கரம் பிள்ளை,
கேசவதேவ்,
வைக்கம் முகமது பஷீர்,
உரூப், எம்.டி.வாசுதேவன் நாயர்,
டி. பத்மநாபன், மாதவிக்குட்டி,
பொற்றே காட்,
லலிதாம்பிகா அந்தர்ஜனம்,
என்.எஸ்.மாதவன், பால் சக்கரியா,
சேது, மோகனன்,
புனத்தில் குஞ்ஞப்துல்லா
முதலிய உரைநடை மேதைகளால்
செழுமைப்படுத்தப்பட்ட
மலையாள
இலக்கியப் பெருவெளியில்
கருவாச்சி காவியம் நுழைவது
இலக்கியப் புளகம் தருகிறது
கலையாழம் கண்ட மலையாளம்
என் படைப்பையும் வரவேற்கும்
என்று நம்புகிறேன்
தென்மாவட்டங்களின்
வட்டார வழக்குப் பேசிய
தாயே கருவாச்சி!
இனி மலையாளமும் பேசு