சென்னையில் கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வந்த “சென்னை சர்வதேசத் திரைப்பட விழா” நேற்று முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்வின் இறுதியில், தமிழ்ப் பட போட்டிப் பிரிவில் கலந்து கொண்டு பரிசு வென்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு சிறந்த
படத்திற்கான விருது வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படத்திற்கான விருதினை ஹலீதா ஷமீம் இயக்கிய “சில்லுக்கருப்பட்டி” மற்றும் “பக்ரீத்” திரைப்படங்கள் பகிர்ந்து கொண்டன. சிறந்த இயக்குநருக்கான விருது “அசுரன்” படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஜூவி படத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் மற்றும் பாபுதமிழ் இருவரும் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஜூர் விருதை வென்றனர்.