Tamil Movie Ads News and Videos Portal

கடைசி விவசாயி- கதை என்ன..!?

‘காக்கா முட்டை’ ‘குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டன் தற்போது விஜய் சேதுபதி இயக்கத்தில் “கடைசி விவசாயி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையென்ன என்பது குறித்து மணிகண்டன் பேசியதாவது, “கடைசி விவசாயி திரைப்படம் விவசாயம் நம் மக்களின் வாழ்வோடு எப்படி ஒன்றி இணைந்த ஒன்று என்பதை இப்படத்தின் திரைக்கதையில் கூறவிருக்கிறேன். விவசாயம் என்பது தொழிலல்ல. அது ஒரு வாழ்வியல் அதனோடு தொடர்புடைய நபர்கள் எத்தனை பேர் என்பதை

அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த நல்லதும் நடக்காமல் ஒரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் குலதெய்வ வழிபாடு நடத்த முடிவு செய்யும் போது, ஒரு படி நெல் தேவைப்படுகிறது. நெல் தேவைப்படும் போதுதான், அந்த கிராமத்தில் எல்லோருமே விவசாயத்தை கைவிட்டுவிட்டது நினைவு வருகிறது. கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் 80 வயதான பெரியவர் ஒருவர் தனக்கான சிறிய நிலத்தில் விவசாயம் செய்து ஜூவனம் செய்கிறார். அவருக்கு காது கேட்காது. அவரைப் போய் கிராமமக்கள் சந்திக்கின்றனர். இப்படி கதை பயணிக்கிறது. கரிசல்காட்டு விவசாயிகளிடம் ம் மட்டுமே நமது பாரம்பரிய விவசாய முறை அழியாமல் இருக்கிறது என்று நான்நம்புகிறேன். உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 16 கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். உண்மையான விவசாயிகளே நடித்துள்ளனர். படம் பொங்கல் தினத்தன்று வெளிவரவிருக்கிறது..” என்று பேசினார்.