Tamil Movie Ads News and Videos Portal

”பாலிவுட் ஹீரோக்கள் கோழைகள் ”– கங்கணா ரனாவத் தாக்குதல்

ஏ.எல்.விஜய் இயக்கும் “தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் வேடத்தில் நடிக்கவிருக்கும் கங்கணா ரனாவத் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருப்பதை அடுத்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் திரைப்படத்துறையை சேர்ந்தவர் எல்லாம் தங்களது வாயை இறுக மூடிக் கொண்டு இருப்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. பாலிவுட் ஹீரோக்கள் எல்லாருமே கோழைகள்;

அவர்களிடம் சென்று கேட்டால், எங்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கிறது. நாங்கள் ஏன் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள். இன்னும் சிலரோ நாங்களோ விடிந்ததும் மேக்கப் போடும் சாதாரண கலைஞர்கள், நாங்கள் எப்படி போராட முடியும் என்று கேட்பார்கள். இன்று திரைத்துறையில் நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள் என்றால், அது மக்கள் உங்களுக்கு கொடுத்த அங்கீகாரம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது, அது குறித்து குரல் கொடுக்க ஏன் இவ்வளவு தயக்கம்..? பயம்..?? இன்ஸ்டாகிராமில் பதிவு இட்டு விட்டால் உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதா..? என்ன.. மக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் இடத்திற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள்.