இந்தப் புத்தகத்தைப் பத்தி நிறையா படிச்சிருந்தும் இந்தப் புத்தகத்தை இதுவரை படிச்சதில்ல. நேற்றும் இன்றுமாக இரண்டே டேக்கில் படிக்க வைத்த ‘அவள் பெயர் தமிழரசி’ ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் சாருக்கு முதல் நன்றி! நூல் தந்தமைக்காக❤️
“ஒரு பொம்பளைய தேவி…யான்னு சொல்ல இங்க ஒரு ஆம்பளைக்கும் யோக்கியத கெடயாது. இதை யாரும் ஏத்துக்கலனாலும் அதான் நெசம்! ஏசு முத மானஸ்தன் கல்ல எடு என்ற கான்செப்ட் தான் அது.
நாவலை இழுத்துப் பிடிச்சி வாசிக்க வைக்கிற மேட்டர் ஆண்/பெண் உறவுல இருக்குற சைக்காலஜி விசயங்களை லாவகமா அய்யா இமையம் அணுகி இருக்குற விதம் தான்.
புருசனை இழந்து ஊருக்கு வந்த கமலாட்ட அவன் காதல் வயப்பட்டு வாக்கப்படாம வாழ்க்கைப் பட்ட கதையை அவன் வாயாலே வாசிக்கிறது அவன் கையப்பிடிச்சிட்டு கூடப்போனமாதி இருக்கு..கடலூர் எழுத்து நடை..அட ..அட
கட்டுனவன் இருந்தா நான் ஏன் உன்கிட்ட நாய் படாதபாடு படணும்னு கமலா பொருமுற எடமும், பத்து வருசமா நம்ம வாழ்க்கையைத் தொலைச்சிருந்தும் வசதியானவன் வளைச்சதும் வளைஞ்சிட்டாளேன்னு அவன் நொறுங்குற இடமும் ஓர் உளவியல் சினிமா!
“மனசு நாய் மாரி ஓடிக்கிட்டிருக்கு”ன்னு ஒரு டயலாக் வரும் புக்ல. கண்டதுலயும் வாய் வைக்கும் நாய். ஆனா குடலுக்குப் பிடிச்சதை தான் உள்ள ஏத்துக்கும். அதை மாதிரி வாழ்க்கையில எதை உள்ளத் தள்ளி வச்சிருக்கோம் என்பது முக்கியம்.
காதலையும் சமயோசிதமா வாழ்தலையும் சூழல் தான் தீர்மானிக்கு.
ப்ளேடை எடுத்து கமலா கழுத்துல அவன் வைக்கும் போது அவன் மனசுல ஒரு எண்ணம் வரும்! நிறைகுறைகளோட சக உயிரை ஏத்து வாழ்றது தான் ஒர்த்தான லைப் என்ற எண்ணம் அது. அதுதான் எங்கதெயை பொன்கதையா ஆக்குது