சினிமா உலகை அழிக்க வேண்டும் என்று நோக்கில் மனசாட்சியற்ற மந்தைகள் நாடெங்கும் உருவாகி வருவது வேதனை அளிக்கிறது..கடந்த வாரம் வெளியான தர்பார் படத்தை லோக்கல் டிவி சேனலில் ஒளிப்பரப்பு செய்த அட்டுழியம் மதுரையில் நடந்துள்ளது. இது படத்தின் வசூலைப் பெரிதும் பாதிக்கும் என்று லைகா நிறுவனம் உடனடியாக கமிஷ்னர்
அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது. சரண்யா என்ற பெயரில் உள்ள லோக்கல் சேனல் இப்படியொரு அயோக்கியத்தனத்தைச் செய்திருப்பதற்கு பெரும் கண்டனங்கள் திரை உலகில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.. (புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்)