தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் மரகதமணி என்ற பெயரில் இசையமைப்பாளராக இருந்தவர் தான், தற்போது இயக்குநர் இராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் கீரவாணி. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இனிப்பு சாப்பிட்டால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். அதனால் இனிப்பு வேண்டாம்.

இளையராஜாவின் பாடல்களை கேளுங்கள். அது உங்களுக்குத் தேவையான இனிப்பு சுவையை கொடுப்பதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். ‘தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே..’

என்ற இளையராஜாவின் பாடலையும் பாடி இருக்கிறார். இந்த ஆடியோ பதிவு தெலுங்கில் உள்ளது. இதனை ராஜாவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.