கீதா கோவிந்தம் படத்தின் ஒற்றைப் பாடலின் மூலம் தென்னிந்தியா முழுக்க அறியப்படும் நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நானியின் 27வது படமாக உருவாகவிருக்கும் புதிய படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் நானியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது அவர் நடிக்கும் அவரது 27 படம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. இப்படத்திற்கு ‘ஷ்யாம் சிங்காராய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ராகுல் சிங்குருதியன் என்பவர் இப்படத்தினை இயக்கவிருக்கிறார். இரண்டு நாயகிகளில் ஒன்று ராஷ்மிகா என்றும் மற்றொன்று சாய்பல்லவி என்றும் அறிவித்துள்ளனர்.