“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலின் சொல்லியிருந்தார். சொன்னது போலவே தற்போது முதற்கட்டமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடைப்படையில் திடீரென நேற்று (22.07.2021) லஞ்ச ஒழிப்பு போலீஸார் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி ஆக்ஷன் இதுபோலவே மற்ற முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் தொடருமா? என்று தற்போது அரசியல் அரங்கில் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது