அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வரவேற்ப்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “ஓ மை கடவுளே”. இப்படத்திற்கு தற்போது புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. படத்தில் சில காட்சிகளில் நடிகை வாணி போஜனின் செல்போன் நம்பர் என்று ஒரு நம்பர் சொல்வார்கள்.

அந்த நம்பர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் செல்போன் நம்பராம். படம் வெளியானதில் இருந்து, கண்ட கண்ட நேரங்களில் பலரும் அவருக்கு போன் செய்து வாணி போஜன் இருக்கார்களா..? என்று கேட்கிறார்களாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பூபாலன், 19 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் இந்த செல்போன் நம்பரை பயன்படுத்தி வருவதால், அந்த நம்பரையும் மாற்ற முடியாமல் திணறி வருகிறார். அவர் தற்போது போலீஷ் நிலையத்தில் படக்குழுவினர் தனது செல்போன் நம்பரை தனது அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கின்றனர் என்று புகார் அளித்துள்ளார்.