பாரதிராஜாவின் முதல் மரியாதைப் படத்தில் இடம் பெற்ற ‘அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் ‘ என்ற பாடல் காலத்தால் அழியாதது. இப்பாடலில் நடித்த நடிகர் தீபன் 35 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சூப்பர் டூப்பட் ஹிட் திரைப்படமான ‘முதல் மரியாதை’யில் நடித்து விட்டு மீண்டும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர், தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்படும் ஒரு தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தனக்கு நடிப்பு வராது என்று சொல்லி ஒதுங்கப் பார்த்த அவரை படத்தின் இயக்குநர் ஹேமாம்பர் ஜோஷி வலுக்கட்டாயமாக நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.
2017ம் ஆண்டு C/O கஞ்சரப்பாலம்’ என்கின்ற படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதன் ரீமேக்கில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழும் ஒரு கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் தான் தீபன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கேரளாவின் பிரபல நடிகை சோனியா கிரி நடிக்கிறார். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிக்க வருபவர் மீண்டும் நிலவை கையில் பிடிப்பாரா..? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி அம்மாளின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.