தனிப்பட்ட தனது இசைத் தொகுப்புகளால் தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்டு பின்னர் இசையமைப்பாளராக மாறி இன்று நாயகனாக உயர்ந்திருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி தயாரிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் “நான் சிரித்தால்”. இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகை குஷ்பு, நடிகர் ஆதியால் சக்களத்தி சண்டை கிளம்பிவிடும் போல் இருக்கிறது என்று ஒரு உண்மையைப் போட்டு உடைத்தார்.
அவர் விரிவாகப் பேசியதாவது, “இது போன்ற சினிமா சக்சஸ் மீட் மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் தயாரிப்பில் வெளியாகும் படம் மட்டுமின்றி அனைவரின் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எனது ஆசை. எனக்கு சக்களத்தி ஹிப் ஹாப் ஆதி தான். அவரும் என் கணவரும் போனில் பேச ஆரம்பித்தார்கள் என்றால் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பார்கள். எனது இந்த வளர்ச்சிக்குக் காரணம் என் கணவர் எனக்குப் பக்கபலமாக இருப்பது தான். அவருக்கு என் நன்றி.” என்று பேசினார்.