இந்தப்படத்தை நிஜமாவே செல்வராகவன் தான் எடுத்தாரா?
எவ்வளவு அலட்சியமான சினிமா. ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்றளவில் லாஜிக் ஓட்டைகள். இங்கு இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர்த்து யாரும் ஆட்சிக்கே வரமுடியாது. ஆனால் இவர்களை விரட்ட வேண்டும் என்ற அபத்தமான கருத்தியல், துளியும் மத்திய அரசைத் தாக்கிடாத பாதுகாப்புத்தனம், திராவிடம் வேண்டும் ஆனால் இப்போது இருக்கிற திராவிடத்தலைவர்கள் வேண்டாம் என்ற கொள்கை என படம் முழுதும் பக்கா சுயநலம் தெரிகிறது.
ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான தொடர்பு மகா மட்டமாக இருக்கிறது. ரசிகனின் மனநிலை பணநிலை அறிந்து படம் எடுத்தார்களா என்று தெரியவில்லை.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மட்டும் தான் படத்தை ஓரளவு ரசிக்க காரணமாய் இருக்கிறது. இவர்கள் திராவிடத் தலைவர்களை கேவலமாக சித்தரிப்பார்களாம். ஆனால் அவர்கள் வளர்த்த கட்சியில் மட்டும் சமர்த்தாக அமர்ந்து இவர்கள் தலைமையேற்று நல்லாட்சி தருவார்களாம். படத்தின் முடிவில் அண்ணன் எப்போ காலி ஆவான் திண்ணை எப்போ கிடைக்கும் என்ற முனைப்பைத் தான் சூர்யா கேரக்டர் காட்டுகிறது. இதே மாதிரி இன்னும் ஒரு படம் நடித்தால் சாய்பல்லவி தமிழ்நாட்டுக்கு சூட்டிங் பார்க்கக் கூட வரவேண்டிய இருக்காதுங்கிறேன்.
படம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் வரும் குழப்பம் படம் நெடுக வருகிறது..முடிவில் எங்குபோய் முட்டுவது என்றே தெரியவில்லை. சூர்யாவிற்கு அரசியல் ஆசை இருக்கலாம். அதற்காக வேண்டுமானால் அவர் படம் நடிக்கலாம். அதற்காக மக்களைப் பார்த்து “நீங்கள் முட்டாள்கள், போராட லாய்க்கற்றவர்கள், நீங்கள் ஆயுதப் போராட்டத்திற்கு கூப்பிட்டால் ஓடி ஒளிந்து கொள்வீர்கள். அதனால் தான் காந்தி உங்களை அகிம்சைக்கி அழைத்தார். இங்கிருக்கிற திராவிடக் கட்சிகளில் இருக்கும் தலைவர் கள் சரியில்லை. அவர்களை அள்ளி எறிய வேண்டும். அதேநேரம் அவர்களை எதிர்த்து அரசியலில் ஜெயிக்க முடியாது. அதனால் அவர்களின் இடத்தை மட்டும் அபகரிப்போம்” என்ற விஷத்தை வசனம் வழியாகவும் காட்சிமொழியாகவும் பரப்பக் கூடாது. அப்பட்டமாக இந்தப்படம் யாருக்குச் சொம்படிக்கிறது என்று தெரிகிறது. சரி அதையாவது சரியாகச் செய்தீர்களா? இதில்வேறு ஒரு குரூப் செல்வராகவன் படம்லாம் பத்து வருசம் கழிச்சு தான் ப்ரோ பிடிக்கும் புரியும்னு சொல்லிட்டு சுத்துதுங்க.