சக மனிதர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் படைப்பு
வல்வெட்டித்துறையில் இருந்து டூரிஸ்ட் ஆக இல்லாமல் கிட்டத்தட்ட அகதி போல வந்திறங்கிறது சசிகுமார் குடும்பம். இந்தச் சூழலில் ராமேஸ்வரத்தில் நடக்கும் குண்டுவெடிப்பில் இந்தக் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகப்படுகிறது. வறுமை காரணமாக தாய்மண் விட்டு தமிழ்நாடு திரும்பிய இந்தக் குடும்பம் இந்தச் சூழலை எப்படிக் கடந்தது என்பதே படத்தின் கதை
கதாநாயகன் சசிகுமார் அக்கதையின் ஆழத்தை உணர்ந்து நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். சிம்ரன் படத்தின் கனம் உணர்ந்து அசத்தியுள்ளார். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி அநாசயமாக ஸ்கோர் செய்கிறார் கமலேஷ் ஜெகன். இவர் ராட்சசி படத்தில் ஜோதிகாவிடம் ப்ரபோஸ் செய்யும் சிறுவனாக நடித்தவர். யோகிபாபுவை விட சூழலுக்கேற்ப எதாவது பேசிவிடும் கமலேஷ் ஜெகன் தான் படத்தின் கலகலப்பிற்கு கியாரண்டி தருகிறார். ரமேஷ்திலக் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
இசை படத்தின் ஒரு கேரக்டராக ரோல்ப்ளே செய்துள்ளது. ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தியைக் கடைப்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங்,கலை இயக்கம் உள்பட அனைத்து அம்சங்களும் படத்தில் சிறப்பாக கைகூடியுள்ளது
ஒரு நல்ல கதையை எடுத்து, சிறப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை படத்தின் இறுதிவரை கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர். சிறுசிறு விசயங்கள் படத்தில் செயற்கையாக தெரிந்தாலும், படத்தின் முடிவு நமக்குள் ஒரு பாசிட்டிவிட்டியை ஏற்படுத்துவதால் இந்த விடுமுறையை நாம் டூரிஸ்ட் பேமிலியோடு கழிக்கலாம்.
-வெண்பா தமிழ்
3.25/5