தன் ஊருக்காக அரசு வேலையைக் கூட துறந்து கபடி ஆடிய ராஜ்கிரணின் குடும்பம் வெத்தலைக் கொடிகள் வளர்த்து வாழ்கிறது. அக்குடும்பத்தின் பிள்ளை அதர்வா குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதும், அதர்வா எப்படி குடும்பத்தோடு இணைந்தார் என்பதும் ஒரு கதை!
அப்போ வேற கதையும் இருக்கா பாஸ்?
ஆமா பாஸ் கதை கதையா இருக்கு!
எள் என்றால் வில்லாகப் பாயும் அதர்வா இப்படத்திலும் தன் உழைப்பைக் கொட்டத் தவறவில்லை. ஆனால் பலன்? ராஜ்கிரணின் ஸ்கிரீன் பர்சன்ஸ் அதிர அதிர மிரட்டுகிறது. செண்டிமெண்ட் காட்சிகளும் நச்..வயதானாலும் சிங்கம் சிங்கம் தான். ராஜ் ஐயப்பா முன்பாதி மட்டுமே வந்தாலும் நச்சென்று மனதில் பதிகிறார். ஏனைய கேரக்டர்கள் யாரும் மனதில் ஒட்டவே இல்லை
காட்சிகளுக்கு ஜிப்ரானின் இசை கொடுக்கும் அதிர்வை காட்சிகள் தராதது பெரும்சோகம். பாடல்களில் மஞ்சணத்தி பாட்டும் மட்டும் ரிப்பீட் மோட்! “அந்தப்பாட்டு அப்படியே கூண்டுக்குள்ள உன்னை வச்சின்னு வரும் சின்னக்கவுண்டர் படப்பாட்டின் நகல்ங்க” என்பது பத்திரிகையாளர் வேணுஜி அவர்கள் சொன்ன தகவல். நாமும் கேட்டுப்பார்த்தால் அட ஆமாங்!
சற்குணம் படங்களில் களவாணி முதல் கிட்டத்தட்ட எல்லா படங்களிலுமே விஷுவல்ஸ் நன்றாக இருக்கும். இப்படத்திலும் அது பக்கா! ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்
ஒரு நூல் பிடித்து அதை வைத்தே அடுக்கடுக்காக செல்ல வேண்டிய திரைக்கதையை,கன்னாபின்னாவென பிரித்துப் போட்டுள்ளார் இயக்குநர் சற்குணம். தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்வியலை காட்டியதெல்லாம் அழகு தான்..ஆனால் அந்த அழகியல் கதையோடு கனெக்ட் ஆக வேண்டுமல்லவா? ..
அதர்வா தம்பியின் கபடி ப்ளேயர் கனவு சிதையும் இடமெல்லாம் நமக்கு கண்ணீர் வந்திருக்க வேண்டும். லட்டு லட்டாக வந்திருக்க வேண்டிய கபடி போட்டி காட்சிகள் எல்லாம் பிட்டு பிட்டாக உதிந்து போய்விட்டது.
அரசனுக்கு பட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் அரசன் என்பதை மக்களாவது நம்ப வேண்டும் அல்லவா?
என்னமோ போங்க பாஸ் !
இருந்தாலும் குடும்பம் ஒன்றுபட்டால் நமக்கு எதிராக ஊரே நின்றாலும் சமாளிக்க முடியும் என்பதைச் சொன்னதிற்காக ஒருமுறை பட்டத்து அரசனைப் பார்க்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்