ஒரு திரைப்படப்படத்தில் இவர்தான் மாஸ் காட்ட வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் மாஸ் காட்டலாம். ஆனால் அந்த மாஸுக்கான சரியான லாஜிக் ரீசன் இருக்கவேண்டும். அந்த மாஸை கதை ஏற்படுத்த வேண்டும்..இல்லையானால் அது படம் பார்ப்பவர்களுக்கு வதை ஏற்படுத்திவிடும்.. குருமூர்த்தி அப்படியொரு வதை
கெட்டவர்களைப் போட்டுப்பொளக்கும் நல்ல போலீஸ் நட்டி. கள்ளக்காதலை நல்லது எனச் செய்யும் ராம்கி. ராம்கியின் பணம் 5 கோடி மிஸ் ஆக அதைக் கண்டு புடிக்கும் அஜெண்டா நட்டிக்கு வருகிறது. பணத்தை யார் அடித்தார்? நட்டி எப்படி கண்டு புடித்தார்? இடையிடையே இயக்குநர் எதையெல்லாம் உடைத்தார்!! (நம்ம மண்ட உள்பட) என்பதே கதை
விறைப்பாக நட்டி நடந்து வரும்போது சிரிப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ராம்கிக்கு படத்தில் அவ்வப்போது நெஞ்சுவலி வரும். அது படம் பார்க்கும் ரசிகர்களின் உள்வலியை வெளிப்படுத்தும் குறியீடு போல. பூனம்பஜ்வா ஒரு வாழ்ந்து கெட்ட ஆன்டி போல இருந்தாலும் ஈர்க்கவே செய்கிறார் ஒரு பாட்டில் மட்டும்
பின்னணி இசை ஒரு வதை என்றால், கேமரா கோணங்கள் பெரும் வதை. பூனம்பஜ்வா நட்டிக்கான ஒரு மூட் சாங்கில் கேமரா மேன் வைத்துள்ள ஷாட்ஸ் எல்லாம்….சொல்ல வார்த்தையே இல்லை ரகம்ஸ்
திருட்டுக்காதலுக்காக திருடு போன பணத்தை யார் திருடினார் எனக் கண்டுபுடிக்கும் போலீஸ் கதையில் காமெடி என்ற பெயரில் ரவிமரியா கடுப்பேத்தும் போதெல்லாம்….ஸ்ஸ்ப்பா
“விஜயகாந்துக்கு ஒரு திருமூர்த்தி உங்களுக்கு ஒரு குருமூர்த்தி”ன்னு யாரோ நட்டி காதுல சத்தமா சொல்லிருப்பாங்க போல. திருமூர்த்தி படத்துல, “செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி” என்ற பாட்டு காதில் தேனா கொட்டும்.. இந்தக் குருமூர்த்தி மொத்தப்படமும் காதுல செங்குருதியா கொட்டுது
கடுப்பேத்துறாங்க மைலாட்
தயாரிப்பாளருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு திரைப்படத்தில் எதைச் செய்யக்கூடாது என்பதை இப்போது கற்றிருப்பீர்கள். கதை தேர்வுக்கு என்று பிரிவை ஏற்படுத்தி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுங்கள். நிச்சயமாக நல்ல கதைகளையும் படங்களையும் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள் மக்கள். மக்களோடு சேர்ந்து நாங்களும்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்