நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த நாயகன், பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி. இருவரும் காதலித்தால் என்னவாகும்? இதுவே கதை.. கதையே வதை.
ஒரு அழகான சேட்டுப்பொண்ணு. வாழ்வை எளிமையாக அணுக வேண்டும். எல்லோரிடமும் அன்போடு பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். நாயகன் சின்னச் சின்ன திருட்டு வேலைகள் செய்பவன். எப்படி யோசித்தாலும் இருவருக்கும் செட்டாகாது என முடிவெடுக்க நாம் யார்? காதல் என்பது எதையும் விஞ்சும் அல்லவா? நாயகி ஐஸ்வர்யா தத்தாவை நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர் மீது காதலிக்க வைக்கிறது காதல். அப்புறம் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் திரைக்கதையாக விரிகிறது
எம்.ஜி.ஆர் போன்ற கலரும், எம்.ஜி.ஆரின் பேரன் என்ற அடையாளமும் இருந்தால் போதும் என்று நினைத்து நடிப்பை வீட்டிலே வைத்துவிட்டார் போல ஜூனியர் எம்.ஜி.ஆர். மருந்துக்கு கூட நடிப்பு எட்டிப்பார்ப்பேனா என்கிறது. ஐஸ்வர்தா தத்தா குழைந்து குழைந்து நடிப்பதை வெறுப்பதா..இல்லை அவர் அரை டவுசரோடு வருவதை ரசிப்பதா? என்ற குழப்பத்தோடே படம் பார்த்துச் சேர்க்க வேண்டியதிருக்கிறது. யோகிபாபு சென்ட்ராயன் இந்த இருவர் மட்டுமே நடிகர்கள் லிஸ்டில் ஆறுதல் அளிப்பவர்கள்
தன் பங்கிற்கு நம்மை எவ்வளவு படுத்தியெடுக்க வேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டார் ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவாளரும் சேம்ப்ளட்
நரிக்குறவர்கள் பின்னணியில் நம்மை உலுக்கியெடுக்கும் எத்தனையோ கதைகள் இருக்க, நம்மை பிதுக்கி எடுக்கும் கதை திரைக்கதையோடு வந்திருக்கிறார் கீரா.
மிடில சாமியோவ்
1.75/5
-மு.ஜெகன் கவிராஜ்