அரசு மக்களுக்கு லீகலா செய்ய வேண்டியதை, ஒரு ராபின்ஹுட் ஹீரோ இல்லீகலா செஞ்சா அதுதான் ஜவான்
ஒன்லைனா இது. படத்தோட டெட்லைன் ஹெட்லைன்ன்னு இன்னும் சில விசயங்கள் படத்தில் இருக்கு. ஒரு மாஸ் ஹீரோ ஹேண்டில் பன்ற பிரச்சனையில நிச்சயமாக விவசாயம் இருக்கணும்..அது இருக்கு. அரசு ஆஸ்பிடல் இருக்கணும் இருக்கு. தேசத்துரோகம், தேசத்தியாகம் இருக்கணும் இருக்கு. ஒரு எமோஷ்னல் ப்ளாஸ்பேக் இருக்கணும், கொடூரவில்லன் இருக்கணும், கொலமாஸா பாட்டு இருக்கணும், பாட்டு இருக்கணும்..இப்படி ஒரு பக்கா கமர்சியலுக்கான எல்லா விசயங்களும் இருக்கணும். அது நிறைய்ய இருக்கு..நிறைவாகவும் இருக்கு
ஷாருக்கான் மாஸ் காட்டலன்னா வேற யார் காட்ட முடியும். இதில் வேற டபுள் டமாக்கா! மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவிற்கு எப்படி சீன் கம்போஸ் பண்ணணும் என்ற வித்தை அட்லிக்கு நன்றாகவே கை வந்திருக்கு. நம்ம விஜய் சேதுபதி குரலை உயர்த்தாமலே கொலை நடுங்க வைக்கிற வில்லனா மிரட்டியிருக்கிறார். ஒரு கலெக்டரை அவர் டீல் பண்ற விதம், தீபிகா படுகோனேயிடம் அவர் பேசுற சீன்..இரண்டுமே ஒருசோறு பதம். மாஸ் & க்ளாஸ் பெர்பாமன்ஸ் நயன்தாராவுக்கு, ஷாருக்கானை மடக்க வந்துட்டு ஷாருக்கிட்ட மடங்கிப் போகிற எமோஷ்னல் காட்சிகளில் அவர் நடிப்பு அல்டி. சற்று நேரம் என்றாலும் நெஞ்சில் ஸ்ட்ராங்கா நிற்கிறார் தீபிகா படுகோன். கெஸ்ட் அப்பிரியன்ஸா வர்ற சஞ்சய் தத் ஸ்வீட் சர்ப்ரைஸ்! மேலும் பிரியாமணி உள்ளிட்ட எல்லா கேரக்டர்களும் பக்கா ஸ்கெட்ச்
சிறப்பாக எழுதப்பட்ட/ எடுக்கப்பட்ட காட்சியை இன்னும் சிறப்பாக்கி தந்துடுறார் அனிருத். ஷாருக்கோட ஒவ்வொரு என்ட்ரிக்கும் போடப்பட்டுள்ள பி.ஜி.எம்க்கும் தியேட்டர் தெறிக்குது. GK விஷ்ணுவோட சினிமாட்டோகிராபி அவுட்ஸ்டாண்டிங் ஆ இருந்துச்சு. பைட் சீன்ஸ்ல லைட்டிங் எல்லாமே தரம்..அனல் அரசு உள்பட ஏழு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் வொர்க் பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு கிக்கும் ஒவ்வொரு பன்ச்சும் வேறலெவல். ரூபனோட எடிட்டிங் செம்ம ஷார்ப்
சிறை போலீஸ் அதிகாரி, நல்லது செஞ்சதுக்காக வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஜெயிலுக்குள்ள வந்த பெண்கள், இந்தப் பெண்களை வச்சு அந்த அதிகாரி..அதான் நம்ம ஹீரோ போடும் திட்டம், அந்தத் திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் அந்தப் பெண்களின் எமோஷ்னல் ஸ்டோரிஸ், ஹீரோவுக்கு தனிப்பட்ட முறையில் கதையோடு கனெக்ட் ஆகுற பேக்ஸ்டோரின்னு திரைக்கதையில் நிறைய மெனக்கெட்டிருக்கார்கள் அட்லீ& S.ராமநகரிவாசன் ஆனால் மெயின் கதையும் காட்சியமைப்புகளும் ஷங்கர் படங்களை நினைவுபடுத்துகின்றன. சில மணி நேரத்தில் விவசாயிகள் கடனை எல்லாம் ஷாரூக் அடைக்க வைப்பது போன்ற காட்சிகள் லாஜிக் மீறலாகத் தான் தெரிகிறது. அதே சமயம் அதன் பின்னணியில் உள்ள அரசியல் அபத்தங்கள் பேசப்பட்டிருப்பது கச்சிதம் மற்றும் தைரியம்.
ஒரு கமர்சியல் ஆடியன்ஸுக்கு என்ன தேவையோ அது எல்லாமே இந்தப்படத்தில் இருப்பதால் ஜவான் நம்மை கமான் என அழைக்கிறார்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்