தொடர்கொலைகாரனை கண்டுபுடிக்கும் கதை தான் இறைவன்
சிட்டியில் பெண்களை நிர்வாணமாக்கி கொலைகள் செய்து வருகிறார் படத்தின் வில்லன். ஹீரோ அதைக் கண்டுபுடித்து வேட்டையாடுகிறார். இவ்வளவு தான் கதை! இதை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நகர்த்த படு வீக்-ஆன திரைக்கதை வேறு
முறைப்பதே நடிப்பதற்கு போதும் என நினைத்துவிட்டார் போல ஜெயம் ரவி. முறைக்கிறார், அடிக்கிறார் அவ்வளவு தான். நயனுக்கு படத்தில் வேலையே இல்லை. நரன் கேரக்டர் ஓகே ரகம். வில்லன் மட்டும் நடிப்பில் மிரட்டியுள்ளார்.
யுவனின் இசையில் பாடல்கள் எதுவும் தேறவில்லை. பின்னணி இசையில் பெரியளவில் சில முயற்சிகளைச் செய்துள்ளார் யுவன். ஆனால் வலுவில்லாத காட்சிகளால் அவரது இசையுழைப்பு பேரிழப்பு! ஒளிப்பதிவு மட்டும் படத்தில் கச்சிதமாக அமைந்துள்ளது.
சீரியல் கில்லர் கதைகளுக்கு பலமே திரைக்கதை தான். ஆனால் அகமது மகா அபத்தமான ரைட்டிங்-ஐ கொடுத்துள்ளார். ரத்தம் தெறிக்க தெறிக்க எழுதப்பட்ட/ எடுக்கப்பட்ட காட்சிகளில் கொஞ்சம் கூட கலைநயம் இல்லை. சில படங்களில் பயங்கரம் இருந்தாலும் அதில் ஒரு சினிமாட்டிக் டச் இருக்கும். இதில் எதுவுமே இல்லாமல் படம் நம்மை உச் கொட்ட வைத்தது தான் மிச்சம்
இறைவன்- கொடூரமாக இருக்கிறான்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்