பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் கூட்டம் தற்போது கோடம்பாக்கத்தில் கூடி வருகிறது. அந்த வரிசையில் இந்தக் க்ரைம் தப்பில்ல என்ற படமும் இணைந்துள்ளது
கதை என எதையும் சொல்லலாம். ஆனால் அதில் சுவாரஸ்யம் இருக்கிறதா? என்பது தான் விசயமே! இந்தப்படத்தின் கதையின் ஆதாரம் என்னவோ பிரமாதம் தான். ஆனால் திரைக்கதை?
ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கிறார்கள். அந்தப்பெண்ணும் இன்ட்ரெஸ்ட் காட்டுகிறாள்? அய்யோ அடுத்து? அடுத்தடுத்து நடப்பது தான் மீதி கதை
நடிப்பில் யாருமே பெரிதாக ஜொலிக்கவில்லை. காரணம் யாருக்குமே ரைட்டிங்கில் டெப்த்-ஐ இயக்குநர் கொடுக்கவில்லை. லவ்வர் பாயாக வரும் மூன்று இளைஞர்களில் தயிர்சாதம் சாப்பிடும் கார்த்திக் ராஜா மட்டும் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். ஹீரோயின் ஆடுகிறார் பாடுகிறார் சண்டை போடுகிறார்..But நடிக்க மட்டும் மாட்டேன்கிறார்
படத்தில் இசைக்கப்பட்டுள்ள இசையில் ஒரு பாடல் மட்டும் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசை எதோ பரவாயில்லை. ஒளிப்பதிவில் அல்டிமேட் என்று சொல்லும் படி ஒரு ஷாட்டும் இல்லை.
எடிட்டிங்கில் நிறைய ஜம் கட்ஸ்
ஒரு கோர்வையான கதை சொல்லலும் தெளிவான திரைக்கதையும் இல்லாததால் படம் நிறைய இடங்களில் தடுமாறுகிறது. ஒரேயொரு நல்ல விசயம் படம் பெண்களுக்கு ஆதரவாக நிற்பது தான்.. மற்றபடி ஒன்னும் சரியில்ல
-மு.ஜெகன் கவிராஜ்