காட்டுல வேட்டையாடுறவங்களை வச்சு காட்டை வேட்டையாடுறங்களை காட்டுற கதை இது. ஒரு ஹீரோவை பழி தீர்க்க இன்னொரு ஹீரோ கிளம்பிப் போகுற அந்த ஒன்லைன் அந்த ஒன்லைனுக்குப் பின்னாடி இருக்கிற குட்டி குட்டி ஸ்டோரிலைன் என கண்டெண்ட் ஆக ரொம்பவே ஈர்க்கிறது ஜிகிர்தண்டா டபுள் x
ராகவா லாரன்ஸ் பக்கா இயக்குநரின் நடிகன் என்பது இந்தப்படத்தில் நிரூபணம் ஆகியிருக்கிறது. மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பிலும் தான் மாஸ் என சாட்சியம் சொல்லியிருக்கிறார். எஸ்.ஜே சூர்யா தடுமாற்றமும் கதையேற்றமும் கொண்ட கேரக்டரை உணர்ந்து அசத்தியுள்ளார். நிமிஷா சஜயன் பிள்ளத்தாச்சியாக அசத்தல் ரகம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கேரக்டர்கள் ஏராளதாராளமாக படத்தில் இருக்கிறார்கள். இவர்களின் நடிப்பு ஜொலிப்பதற்கு பின்னால் இருப்பது கார்த்திக் சுப்புராஜின் அபார உழைப்பு
திருநாவுக்கரசின் ஒளிப்பதிவுக்காக மட்டுமே படத்தை ஒருமுறை தனியாகப் பார்க்கலாம். எவரி ப்ரேம்களில் மனிதர் பின்னியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மின்னுகிறார். CG, சவுண்ட் டிசைன், எபெக்ட், கலரிங் என டெக்னிக்கல் டீமும் படத்தில் அதீத உழைப்பைக் கொட்டியுள்ளனர். வாழ்த்துகள்
வீரப்பன் போன்றவர்கள் எப்படி இயக்கப்பட்டார்கள் என்பதையும், தன் சுயலாபத்திற்காக அதிகார மட்டம் எந்த லெவலுக்கெல்லாம் இறங்கும் என்பதையும் படம் பட்டாசுப் போட்டு காட்டியுள்ளது. எல்லா கேரக்டர்களுக்கான அறிமுகமும் நோக்கமும் உணர வைக்கப்பட்டு படம் கதைக்குள் இறங்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது. முன்பாதியில் சில இடங்களில் சற்றுத் தொய்வோடு பயணித்தாலும், எமோஷ்னல் திரில்லர் கலந்த பின்பாதி பட்டயக்கிளப்பி விடுகிறது. இந்த தீபாவளிக்கு ஜிகிர்தண்டா தான் வின்னர் என டிக்ளேர் பண்ணிடலாம்..
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்