முகமறியா குற்றவளிகளை ஓவியம் மூலமாக அடையாளம் காட்டும் ஹீரோ
ஒரு பெரிய கொலைச் சம்பவம் நடக்கிறது. உருவத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை..அதனால் போலீஸ் அதிகாரி தான்யா ஹோப், ஹீரோ வைபவ் உதவியை நாடுகிறார். இவர்களின் கூட்டணி எப்படி கொலைகாரரை நெருங்குகிறது என்பதை இரண்டு மணி நேரத்தில் விறுவிறுப்பாக சொல்ல முயன்றுள்ளது படக்குழு
ஹீரோவாக வைபவ் நல்ல வைப்-ல் இருக்கிறார். சிறப்பான நடிப்பையே வழங்கியுள்ளார். தான்யா ஹோப் காவல் அதிகாரி வேடத்திற்கு கரெக்டாக இருக்கிறார். நந்திதா தன் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார். ஏனைய கேரக்டர்ஸ் எல்லோருமே தங்கள் வேலைகளில் பெரிதாக குறை வைக்கவில்லை
பின்னணி இசையில் இசைஞர் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். ஆனாலும் சிறப்பாகவே இசை அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் நேர்த்தியான உழைப்பைக் கொடுத்துள்ளார்.
வித்தியாசமான ஒன்லைன். விறுவிறுப்பான அவுட்லைன் பிடித்த இயக்குநர் பின்பாதி படத்தை இன்னும் செறிவோடு அணுகியிருக்கலாம். கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ரசிகனுக்கு ஆர்வம் குறைந்து விடும் என்பதை உணர்ந்தே காட்சிகள் அமைத்துள்ளார் இயக்குநர். இந்த மெனக்கெடலுக்கான பலனை படம் கொடுக்குமா? என்றால் நிச்சயமாக படம் சோடைபோகாது எனச் சொல்லலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்