பகலறியாத இரவில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் முருகன்
ஹீரோ வெற்றி அக்ஷயாவை காதலிக்கிறார். ஒரு இரவில் இருவரும் ஓடிப்போகலாம் என திட்டமிடுகின்றனர். கார் கேரேஜில் வேலை செய்துவந்த வெற்றிக்குப் போதைப்பொருள் சம்பந்தமான ஒரு பிரச்சனையும் வருகிறது. தன்னைச் சுற்றியுள்ள இருளை வெற்றி எப்படி கடந்தார்? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
வெற்றி தன் இயல்பான நடிப்பால் கதைக்கு உயிர் கொடுக்க முயற்சித்துள்ளார். அக்ஷயா கொடுத்த வேலையை குறைவின்றிச் செய்துள்ளார். மற்ற ஆர்டிஸ்டுகளும் ஓகே ரகமாக நடித்துள்ளனர்
அபிலாஷின் கேமரா இரவுக்காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. இசையின் மூலம் அக்காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் இசையமைப்பாளர்
துல்லியமான கதை சொல்லல் இல்லாததால் படம் நம்மை ஏகத்திற்கும் குழப்புகிறது. கூடவே கேரக்டர்களின் பிரச்சனைகளும் நமக்குள் முழுதாக கனெக்ட் ஆகவில்லை. ஒரு நல்ல முயற்சி என்ற அளவில் மட்டுமே ஒளி பெறுகிறது இந்தப் பகலறியான்
2.5/
-மு.ஜெகன் கவிராஜ்