உளவியல் ரீதியாக ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் கதை.
ஹீரோ மைக்கேல் தங்கதுரை கவிப்பிரியாவை காதலிக்கிறார். காதலி கவிப்பிரியா ஒரு மலைப்பிரதேசத்தில் ஸ்ரீரஞ்சனிக்கு பணிவிடையாளராக இருக்கிறார். மைக்கேல் தங்கதுரை கவிப்பிரியா இருவரின் காதலின் விளைவாக கவிப்பிரியா கர்ப்பம் ஆகிறார். அதன்பின் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் தான் படத்தின் கதை. இந்தக் கதைக்குள் ஒரு வரலாற்றுக் கதையுமுள்ளது என்பதே அடிஷ்னல் தகவல்
நாயகனாக மைக்கேல் தங்கதுரை. தன் மைல்கல் எது என்பதை உணர்ந்து நடித்துள்ளார். படத்தில் அடுத்தடுத்து என்ன நடக்குமோ? என்ற எதிர்பார்ப்பை தன் சிறப்பான நடிப்பு மூலமாகவே வெளிப்படுத்துகிறார் கவிப்பிரியா. நல்ல நடிப்பு. ஸ்ரீரஞ்சினி நடுத்தர வயதுடைய பெண் தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்
நல்ல நல்ல வசனங்கள் இருப்பினும் அவற்றை கேட்க முடியாதபடி பின்னணி இசை இம்சிக்கிறது. கொஞ்சம் சத்தம் குறைவாய் இருந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் பரவாயில்லை
கதையாக இன்ட்ரெஸ்டிங் லைன் பிடித்த இயக்குநர், அதைத் தேர்ந்த திரைக்கதையாக்கத் தவறியுள்ளார். ‘ஆர்வம் ஆற்றலாகாது’ என்பது ஆரகனிலும் நிரூபணம் ஆகியுள்ளது
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு அல்ல..எதிர்பார்ப்பின்றிச் செல்பவர்களுக்கு இந்த ஆரகன் ஆறுதலளிக்கலாம்
2.5./5
-மு.ஜெகன் கவிராஜ்