அதே தோசை தான். ஆனால் மாஸ்டரும் வேற; டேஸ்டும் வேற!
ஆள் கடத்தலின் கேங் லீடர் சிவா,முதல் பாகத்தில் அமைச்சராகும் கருணாகரனை கடத்துகிறார். அந்தக் கடத்தலுக்கான காரணியும், சிவாவின் அட்ராசிட்டிகளும் தான் படத்தின் கதை திரைக்கதை எல்லாம்
சூது கவ்வும் முதல் பாகத்தின் சிறப்பே மெயின் கேரக்டரான விஜய்சேதுபதி செய்யும் டார்க் க்யூமர்ஸ் தான். ஆனால் அது துளியும் இப்படத்தில் இல்லை. ஹீரோ சிவாவும் அதற்காக பெரிய மெனக்கெடல் எதையும் செய்யவில்லை. கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட மெயின் கேரக்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை
ஒளிப்பதிவு இன்னும் கூட சிறப்பாக அமைந்திருக்கலாம். பின்னணி இசைஞர் வாசித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இசை நமக்கு வதையாகிவிடுகிறது. பாடல்களும் ஈர்க்கவில்லை.
ஒரு சீக்வெல் படத்தை மிகமிக சுமாரான ரைட்டிங் மற்றும் மேங்கிக்கால் சொதப்பி வைத்துள்ளனர். அதனால் முதல் பாகம் படம் மீதே நமக்கு பரிதாபம் வருகிறது. குட்டிக்குட்டி ஐடியாக்கள் மட்டும் சில இடங்களில் வொர்க் ஆகியுள்ளது. அதற்காக மட்டும் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க பாஸ்!
2/5
-வெண்பா தமிழ்