நம் நாட்டு புராணக்காவியமும் இந்து மத காவியமுமான ராமாயணத்தை ஜப்பானிய இயக்குரான யூகோ சாகோ 2டி அனிமேஷன் படமாக 1993-ல் எடுத்து வெளியிட்டுள்ளார். அதை சற்றுப் பட்டி டிங்கரிங் செய்து தமிழ்ப்படுத்தியுள்ளனர்.
ராமாயணத்தின் பேரழகே அதில் வரும் கேரக்டர்களும் அவர்களுக்கான பின் கதைகளும் தான். தாடகை ராமாயணத்தில் வருகிறாள் என்றால் அதற்குப் பின்னால் ஒரு கதையிருக்கும். தாடகையை ராமன் வதம் செய்கிறார் என்றால் அதற்கு ஒரு ரீசன் இருக்கும். கூனி, கோசலை, கைகேகி, தசரதன், வாலி, சுக்ரீவன், கும்பகர்ணன், இலக்குவன் என ராமாயணத்தில் எண்ணவியலாத கேரக்டர்கள் உண்டு. பொதுவாக ராமாயணம் என்றால் ராமன், சீதை, ராவணன், அனுமன் மட்டுமே முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ராமாயணம் பெருங்கடல்
ராமாயணத்தை அனிமேஷனாக எடுக்கும் போது அதில் எண்ணற்ற கவித்துவ காட்சிகளை அடுக்க முடியும். அவையெல்லாம் இந்த அனிமேஷன் படத்தில் சாத்தியமாகியுள்ளது. படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு, வாலி வதைப்படலம் போன்ற முக்கியமான போர்ஷனை இதில் காட்டவில்லை போல.
ஜப்பானில் எடுக்கப்படும் இந்த அனிமேஷன் படத்திற்கு அந்த நேரத்தில் பெரும் எதிர்ப்பு இந்து அமைப்பு மூலமாக எழுந்தது. அதனால் சில சர்ச்சைக்குரிய விசயங்களை இந்த அனிமேஷன் ராமாயணம் காட்டவில்லை
ராமாயணத்தில் உள்ள பல வியப்புக்குரிய காட்சிகளை, மேலும் வியக்க வைக்கும் அளவில் யோசித்து, அனிமேஷனில் காட்டியுள்ளனர். அனிமேஷன் லவ்வராக நீங்கள் இருந்தால் இந்தப்படம் உங்களுக்கானது தான்
3/5
-வெண்பா தமிழ்