அப்பா மகனுக்குள் நடக்கும் எமோஷ்னல் ட்ராமா
நேரமையான அப்பா சமுத்திரக்கனி. அவருக்கு நேரெதிரான மகன் தன்ராஜ். சப் ரிஜிஸ்ட்ராக இருக்கும் சமுத்திரக்கனி தன் மகன் மீது குழந்தை முதலே பாசமாக இருக்கிறார். நேர்மையாக வளர்க்க எண்ணிய மகன் பருவ வயதிலே வழி தவறி திரிகிறான். ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சனை ஒன்றில் சமுத்திரக்கனி மகனான தன்ராஜ் சிக்கிக்கொள்ள, அதன்பின் சமுத்திரக்கனியின் மூவ் என்ன? என்பதாக கதை விரிகிறது
கதாநாயனாக தன்ராஜ் ஈர்த்தாலும், கதையின் நாயகனாக சமுத்திரக்கனி தனித்துத் தெரிகிறார். மகன் மீது பாசத்தைப் பொழியும் தந்தையாகவும், அதே மகனை ஜெயிலுக்கு அனுப்பவும் துணியும் நேர்மையான மனிதராகவும், அதிகாரியாக அறம் நிரம்பியவராகவும் சமுத்திரக்கனி கச்சிதம்..ஹரிஷ் உத்தமன் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுனில் உள்பட இதர நடிகர்கள் அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
படத்திற்கு தேவையான பின்னணி இசையை வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். யுகபாரதி மற்றும் முருகன் மந்திரம் இருவரும் சிறப்பான பாடல் வரிகளைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். தெலுங்குப் படத்தை அப்படியே டப் செய்திருப்பதால் சில இடங்களில் டப்பிங் சரியாக ஒட்டவில்லை
நேர்மையான அப்பா, வில்லன் போன்ற மகன் என்ற வகையிலான படங்கள் நிறைய வந்திருப்பதால் கதையாக இந்தப் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. அதே சமயம், “அறம் என்பது ஸ்பெசலானது அல்ல, அது இயல்பானது” என்ற நல் கருத்தை விதைக்க முயற்சித்த வகையில் இப்படத்தைப் பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்