அதிகார வர்க்கத்திற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு சாமானியனின் கதை ஆதார்
கட்டிட தொழிலாளியான ரித்விகா பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக இனியா இருக்கிறார். தீடீரென இனியா மரணமடைகிறார். ரித்விகா காணாமல் போகிறார். ரித்விகாவின் கணவரான கருணாஸ் அதற்கான காரணத்தையும் நீதியையும் தேடி போராடுகிறார். கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை
கருணாஸ் ஓர் அபார கலைஞன் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனைவியை தேடி பரிதவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார். ரித்விகாவின் தேர்ந்த நடிப்பும், இனியாவின் கேரக்டரும் ஓகே ரகம். காவல் அதிகாரியாக வரும் பிரபாகர் நல்ல நடிப்பு. வேறு எந்த கேரக்டர்களுக்கும் படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை
ஸ்ரீகாந்த் தேவா இந்தப்படத்தை ஒரு சிறந்த கம்பேக்காக யூஸ் பண்ணியிருக்கலாம். அசால்டாக டீல் பண்ணியிருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே சுமார் ரகம் தான். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு எதார்த்தத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
வசனங்களில் நல்ல ஷார்ப்பும், திரைக்கதையில் கூடுதல் அழுத்தமும் இருந்திருக்கலாம். ஆனாலும் நடைமுறை நிதர்சனத்தை விமர்சனம் கடந்து படைத்திருப்பதால் ஆதாரை நம் அடையாளமாக்கிக் கொள்ளலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Aadhaar #ஆதார்