மண்சார்ந்த படங்களும் பெண்சார்ந்த படங்களும் தேவையான ஒரு சூழலில் நமது சமூகம் இருக்கிறது. அதனால் அப்படியான படங்களை வரவேற்பது நமது கடமையாகிறது. அந்த வகையில் ஆட்கள் தேவை படத்தின் கதைக்கரு வரவேற்கக் கூடியது.
ஆட்கள் தேவை படத்தின் கதை நமக்கு நன்குப் பழக்கப்பட்டது தான். ஹீரோ சக்திசிவன் பட்டதாரி இளைஞர். நாயகி சந்திரலேகா மேல் அவருக்கு பெருங்காதல் ஊற்றெடுக்க அக்காதலை கல்யாணம் வரை கொண்டு செல்ல தயாராக இருக்கிறார். இந்நிலையில் நாயகி கடத்தப்படுகிறார். கடத்திய ஆட்கள் தேவைஆட்கள் தேவைநான்கு இளைஞர்களும் காமவெறியாட்டம் மிக்கவர்கள். அவர்களின் கொடூர செயல்களுக்கு உற்றதுணையாக இருக்கிறார் வில்லன் ஈசன் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் அரசியல்வாதி மைம்கோபி. இவர்களிடம் போராடி எப்படி ஹீரோ ஹீரோயினை மீட்டார் என்பதே படத்தில் மீதமுள்ள மேட்டர்.
இயக்குநரும் நடிகரும் ஒருவரே என்பதால் இரு பக்கமும் போகஸ் செய்வதில் சற்று தடுமாறி இருக்கிறார் சக்திசிவன். ஆனாலும் முதலுக்கு மோசமில்லா நடிப்பு.கார்த்திக் ராஜாவின் இசை கதைக்கேற்றாப் போல் இருக்கிறது. சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவும் ஓ.கே ரகம் தான். அட்டகாசமான சமூக அக்கறையுள்ள கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஆட்கள் தேவை நம்மை அதிகமாக ஈர்த்திருக்கும். இருந்தும் இது வரவேற்க வேண்டிய படம் என்பதில் மாற்றமில்லை.
-மு.ஜெகன்சேட்