ஒரு சினிமா எடுத்த கதையை சினிமாவாக எடுத்து அசத்தியுள்ளார் சங்கரகிரி ராஜ்குமார்
2011-ஆம் ஆண்டில் வெங்காயம் என்றொரு படம் வெளியாகி கவனம் பெறாமல் போனது. அந்தப் படம் தாங்கி நின்ற பகுத்தறிவையும், அந்தப் படத்திற்குப் பின்னால் இருந்த நிஜ உணர்வுகளையும் புரிந்த இயக்குநர் சேரன், உடனடியாக அப்படத்தை விளம்பரப் படுத்தி காயம் என்ற பெயரில் மறுவெளியீடு செய்தார். அப்படத்தை இயக்கிய சங்கரகிரி ராஜ்குமாருக்கு அவரின் உறவும் ஊரும் சப்போர்ட் செய்தது. நடிகர்களாகவும் டெக்னிஷியன்களாகவுன் அவ்வூரின் எளிய மனிதர்களே மாறினார்கள். இது சினிமாவில் நடந்த பெரிய மேஜிக். 2011-ல் நடந்த இதையே படமாக எடுக்கலாம் என நிறைய பேர் சொல்லிருந்தார்கள். தற்போது அதையே படமாக எடுத்துள்ளார் ராஜ்குமார்
கதையை எழுதி இலக்கிய அவரே நாயகன். வெங்காயம் படத்தில் நடித்தவர்களே நடிகர்கள். எளிய பின்னணியில் இந்தப் படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார். யாரும் நடிக்காமல் வாழ்ந்துள்ளனர். படத்தில் காமெடிக்கு குறைவே இல்லை. சில எமோஷ்னல் காட்சிகள் கண்களை நிறைக்கிறது
இசை ஒளிப்பதிவு என தொழில்நுட்பமும் போதுமான திருப்தியை தருகிறது
நிச்சயமாக நாம் வரவேற்க வேண்டிய சினிமா. தியேட்டரில் சென்று பாருங்கள்
3/5
-வெண்பா தமிழ்