வீக் என்ட் செலிபிரேஷனுக்கு ஏற்ற ஹாரர் சினிமா
டிமாண்டி காலனி முதல் பாகத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவருமே பார்த்திருக்க வாய்ப்பிருப்பதால், இந்த இரண்டாம் பாகத்தோடு வெகு இயல்பாக கனெக்ட் ஆக முடிகிறது
சீக்வெல் சினிமாவில் ஒரு ப்ரீக்வெல் மேட்டரை வைத்து, முதல் இருபது நிமிட ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங்கில் அசத்திவிடுகிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து. மிகத்தெளிவான திட்டமிடலோடு திரைக்கதையை எழுதியிருப்பதால் படம் பிசிறு தட்டமால் பயணிக்கிறது
முதல் பாகத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆறு வருடம் பின்னோக்கி கதை பயணிக்கிறது. அங்கிருந்து 2015-க்கு மீண்டும் வந்து, 2021-ஆம் ஆண்டோடு கனெக்ட் ஆகிறது. முதல் பாகத்தில் இறந்த அருள்நிதிக்கு கொடுக்கப்பட்டுள்ள பின் கதையும், live-ல் நடக்கும் கதையும் எப்படி ஒன்றோடு ஒன்றாகி நம்மை ஒன்ற வைக்கிறது என்பதே படத்தின் பரபர பயணம்
தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகவும் கவனமாக இருக்கும் அருள்நிதி இந்தப் படத்திலும் அந்தப்பெயரை தக்க வைத்துள்ளார். திரையில் அவர் இரு கேரக்டரில் வந்து தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். திரையில் தனக்கு கிடைத்த பெருவெளியை சரியாகப் பயன்படுத்தியுள்ளார் பிரியா பவானிசங்கர். சித்தப்பா கேரக்டரில் வரும் முத்துக்குமார் கவனம் ஈர்க்கிறார். அருண்பாண்டியன் உள்பட சில சப்போர்டிங் நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்
இப்படியான ஹாரர் படங்களுக்கு இசை தான் ஆன்மா. அதை உணர்ந்து அழகாக வாசித்துள்ளார் சாம்.சி.எஸ். ஒளிப்பதிவாளர் வரைகலை உதவியோடு சிறப்பாக உழைத்துள்ளார். க்ளைமாக்ஸில் சிஜி டீம் கடும் வேலை செய்துள்ளது.
‘முன்பாதியில் ரைட்டிங்கில் அசத்தணும். பின்பாதியில் மேக்கிங்கில் கலக்கணும்’ என அஜய் ஞானமுத்து முடிவெடுத்திட்டார் போல. படம் சிறப்பான சம்பவமாக வந்திருக்கிறது.
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்